India
“தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் சந்தேகத்துக்கு இடம்தரக்கூடாது” : பிரணாப் முகர்ஜி அறிக்கை!
தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம்மாற்றப்படும் காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக 21 எதிர்க்கட்சிகள் கலந்தாலோசிக்கும் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து முறையிடவிருக்கின்றனர்.
தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்யப்படுவதாக வெளிவரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன. மக்கள் அளிக்கும் தீர்ப்பு மிகமுக்கியமானது. அதை சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்தவேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு. வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?