India
அயோத்தி வழக்கு: மத்தியஸ்தர் குழுவுக்கு ஆக.,15வரை அவகாசம் - உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அயோத்தி நில உரிமை குறித்த வழக்கை விசாரித்து வருகிறது.
கடந்த மார்ச் 8ம் தேதி அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண, முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை நியமித்தது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.
வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோர் மத்தியஸ்தர் குழுவில் உள்ளனர். இந்த குழு அயோத்தி நிலம் தொடர்பாக ஆலோசனை நடத்தி இடைக்கால அறிக்கையை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதனையடுத்து, மத்தியஸ்தர் குழுவின் அறிக்கை மீது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது, அயோத்தி வழக்கில் நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர் குழுவின் இடைக்கால அறிக்கை திருப்தியளித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சுமூக பேச்சுவார்த்தை எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், முழுமையான சமரச பேச்சுவார்த்தையை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடிக்கவேண்டும் எனக் கூறி அவகாசம் அளித்துள்ளனர்.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!