India
மகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட் தாக்குதல்: 15 கமாண்டோ படை வீரர்கள் பலி
மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி, மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடமட்டம் நிறைந்த பகுதி. கடந்த ஆண்டு ஏப்.,22 அன்று பாதுகாப்பு படை வீரர்களால் சுமார்40 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவுற்ற நிலையில், மாவோயிஸ்டுகளை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக கடந்த ஏப்.,11 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடந்த கட்சிரோலியில் 150 மீட்டருக்கு தொலைவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் நல்வாய்ப்பாக எவரது உயிருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் அவ்வப்போது மாவோயிஸ்டுகள் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி வந்தனர்.
இந்நிலையில், கட்சிரோலி பகுதியில் சி-60 கமாண்டோ படை வீரர்கள் வாகனத்தில் சென்ற போது அவர்கள் மீது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். வேனில் சென்ற 15 பாதுகாப்பு படை வீரர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!