India
மகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட் தாக்குதல்: 15 கமாண்டோ படை வீரர்கள் பலி
மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி, மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடமட்டம் நிறைந்த பகுதி. கடந்த ஆண்டு ஏப்.,22 அன்று பாதுகாப்பு படை வீரர்களால் சுமார்40 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவுற்ற நிலையில், மாவோயிஸ்டுகளை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக கடந்த ஏப்.,11 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடந்த கட்சிரோலியில் 150 மீட்டருக்கு தொலைவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் நல்வாய்ப்பாக எவரது உயிருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் அவ்வப்போது மாவோயிஸ்டுகள் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி வந்தனர்.
இந்நிலையில், கட்சிரோலி பகுதியில் சி-60 கமாண்டோ படை வீரர்கள் வாகனத்தில் சென்ற போது அவர்கள் மீது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். வேனில் சென்ற 15 பாதுகாப்பு படை வீரர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.
Also Read
-
“கோவிட் காலத்தில் கைதட்ட சொன்ன மோடி.. இப்போதும் மோடி அரசு திருந்தியபாடில்லை..” - திமுக இளைஞரணி விமர்சனம்!
-
RCB அணியை வாங்கியது இவர்களா? மிகப்பெரிய தொகைக்கு கைமாற்றம்.. அணியில் மாற்றம் நிகழுமா! - முழு விவரம்!
-
“175 இடங்களில் உதயசூரியன்; 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
“சிலிண்டர் வழங்குவது மாநில அரசின் கையிலா இருக்கிறது?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பழனிசாமி மகா பொய்யர் என்பதை சாத்தான்குளம் வழக்கு மெய்ப்பித்துள்ளது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!