India
மகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட் தாக்குதல்: 15 கமாண்டோ படை வீரர்கள் பலி
மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி, மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடமட்டம் நிறைந்த பகுதி. கடந்த ஆண்டு ஏப்.,22 அன்று பாதுகாப்பு படை வீரர்களால் சுமார்40 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவுற்ற நிலையில், மாவோயிஸ்டுகளை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக கடந்த ஏப்.,11 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடந்த கட்சிரோலியில் 150 மீட்டருக்கு தொலைவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் நல்வாய்ப்பாக எவரது உயிருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் அவ்வப்போது மாவோயிஸ்டுகள் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி வந்தனர்.
இந்நிலையில், கட்சிரோலி பகுதியில் சி-60 கமாண்டோ படை வீரர்கள் வாகனத்தில் சென்ற போது அவர்கள் மீது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். வேனில் சென்ற 15 பாதுகாப்பு படை வீரர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.
Also Read
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் : காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் MRK உத்தரவு!
-
பெண்ணையாறு - ஒன்றிய அரசு நடுவர் மன்றத்தை உடனே அமைக்க வேண்டும் : அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்!
-
பாஜக அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் GetOutதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை : நிர்மலா சீதாராமனுக்கு குறள் ஒன்றை நினைவூட்டிய முரசொலி!