India
திரிபுரா பாஜக முதல்வர் அடித்து துன்புறுத்துகிறார்: விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு!
திரிபுரா மாநில பாஜக முதல்வர் பிப்லவ் குமார் தேப். உளறல்களுக்குப் பெயர் போனவர். முதல்வராகி பேசிய கன்னிப்பேச்சிலேயே, “மகாபாரத காலத்தில் சேட்டிலைட், இண்டர்நெட் வசதிகள் இருந்தது” என்று கூறி அதிர்ச்சி அளித்தவர்.
“ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தது சரி, ஆனால், டயானா ஹெய்டனுக்கு எதற்காக உலக அழகிப்பட்டம் கொடுத்தார்கள்?” என்று ஆதங்கப்பட்டதாகட்டும், “சிவில் இஞ்சினியரிங் படித்தவர்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும்” என்று கூறியதாகட்டும்; “வேலையில்லாத இளைஞர்கள் பீடா கடை வைக்க வேண்டும்” என்று இலவச ஆலோசனை வழங்கியதாகட்டும்- குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமானவர் பிப்லவ் குமார் தேப்.
“குளத்தில் வாத்துகள் நீந்துவதால் தண்ணீரிலுள்ள ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும், தண்ணீர் சுத்தமாகும்” என்று பிப்லவ் தேப் கூறியது பற்றி இப்போது வரை விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுஒருபுறமிருக்க, பிப்லவ் தேப் குமாரிடமிருந்து விவகாரத்து வழங்குமாறு, அவரின் மனைவி நிதி, தில்லி தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிப்லவ் தேப் குமார் தன்னை மிகக்கொடூரமாக அடித்துத் துன்புறுத்துவதாகவும் அந்த மனுவில் நிதி குற்றம் சாட்டியுள்ளார்.
Also Read
-
குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!
-
ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பெண் : உயிர் காத்த RPF வீரர் - குவியும் பாராட்டு!
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!