India
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் : இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி!
சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் திவ்யான்ஷ் சிங் பன்வார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பைனலில் திவ்யான்ஷ் சிங் பன்வார் 249 புள்ளிகள் குவித்து 2-வது இடம் பிடித்தார். வெறும் 0.4 புள்ளிகளில் தங்கப்பதக்கத்தை இழந்துள்ளார் திவ்யான்ஷ்.
வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலமாக திவ்யான்ஷ், டோக்கியோவில் 2020-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கி சுடுதலில் தகுதி பெறும் 4-வது இந்தியர் திவ்யான்ஷ் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
பெய்ஜிங் உலகக்கோப்பை போட்டியில் துப்பாக்கி சுடுதலில் மொத்தம் 3 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. ஏற்கெனவே, கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் திவ்யான்ஷ் சிங் - அஞ்சும் மவுத்கில் ஜோடியும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனுபாகர் - சவுரப் சௌத்ரி கோடியும் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!