India
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் : இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி!
சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் திவ்யான்ஷ் சிங் பன்வார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பைனலில் திவ்யான்ஷ் சிங் பன்வார் 249 புள்ளிகள் குவித்து 2-வது இடம் பிடித்தார். வெறும் 0.4 புள்ளிகளில் தங்கப்பதக்கத்தை இழந்துள்ளார் திவ்யான்ஷ்.
வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலமாக திவ்யான்ஷ், டோக்கியோவில் 2020-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கி சுடுதலில் தகுதி பெறும் 4-வது இந்தியர் திவ்யான்ஷ் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
பெய்ஜிங் உலகக்கோப்பை போட்டியில் துப்பாக்கி சுடுதலில் மொத்தம் 3 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. ஏற்கெனவே, கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் திவ்யான்ஷ் சிங் - அஞ்சும் மவுத்கில் ஜோடியும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனுபாகர் - சவுரப் சௌத்ரி கோடியும் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !