India
2 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் கவுதம் கம்பீர் : நீதிமன்றத்தில் புகார்!
பா.ஜ.க வேட்பாளர் கவுதம் கம்பீரிடம் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக கண்டறிந்த ஆம் ஆத்மி வேட்பாளர், நீதிமன்றத்தில் கிரிமினல் புகார் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவர் இணைந்ததுமே பா.ஜ.க சார்பில் தில்லி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் வேட்பு மனுதாக்கல் செய்தபோது பல சர்ச்சைகள் எழுந்தது.
இந்நிலையில், பா.ஜ.க வேட்பாளர் கவுதம் கம்பீரிடம் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக அவருக்கு எதிராக அத்தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷி சார்பில் தில்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் கிரிமினல் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்தப் புகாரில், பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் தில்லியில் ராஜேந்திர நகர், கரோல் பாக் என இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்து வைத்துள்ளார். இது சட்டப்படி குற்றம். இந்த குற்றத்திற்கு ஒரு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை உள்ளது என்றும் அவரை வேட்பாளராக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
6வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! ஒரே தொடரில் சாதனை மேல் சாதனை! - முழுவிவரம் உள்ளே