India
2 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் கவுதம் கம்பீர் : நீதிமன்றத்தில் புகார்!
பா.ஜ.க வேட்பாளர் கவுதம் கம்பீரிடம் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக கண்டறிந்த ஆம் ஆத்மி வேட்பாளர், நீதிமன்றத்தில் கிரிமினல் புகார் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவர் இணைந்ததுமே பா.ஜ.க சார்பில் தில்லி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் வேட்பு மனுதாக்கல் செய்தபோது பல சர்ச்சைகள் எழுந்தது.
இந்நிலையில், பா.ஜ.க வேட்பாளர் கவுதம் கம்பீரிடம் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக அவருக்கு எதிராக அத்தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷி சார்பில் தில்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் கிரிமினல் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்தப் புகாரில், பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் தில்லியில் ராஜேந்திர நகர், கரோல் பாக் என இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்து வைத்துள்ளார். இது சட்டப்படி குற்றம். இந்த குற்றத்திற்கு ஒரு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை உள்ளது என்றும் அவரை வேட்பாளராக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
-
”அனல் மின் நிலையங்களுக்கு உரிய நிலக்கரி ஒதுக்கீடு வேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP வலியுறுத்தல்!
-
“அரசமைப்பு திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல; சர்வாதிகாரத்தின் தொடக்கம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!