India
நிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நீட்டித்தது லண்டன் நீதிமன்றம்!
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி தனது உறவினரான மெகுல் சோக்சியுடன் கூட்டுச் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் கோடிக்கணக்கில் கடனை வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற நிரவ் மோடி அங்கு தலைமறைவாக இருந்துள்ளார். சமீபத்தில் மாறுவேடத்தில் நிரவ் மோடி அந்நாட்டின் முக்கிய நகரத்தில் உலா வந்ததை அறிந்ததும், அவரை நாடுகடத்த வேண்டும் என லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது.
மனுவை ஏற்று லண்டனில் உள்ள நிரவ் மோடியை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைக்க வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் ஆணையிட்டது. இந்நிலையில் நிரவ் மோடியின் காவல் முடியவுள்ள நிலையில், அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நிரவ் மோடி தொடர்ந்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வாறு மூன்று முறை நிரவ் மோடியின் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காணொளிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிரவ் மோடிக்கு மே 24-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து மறு விசாரணை மே 24 அன்று நடைபெறும் என வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Also Read
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!
-
“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!