India
கர்நாடக கட்டிட விபத்தில் இருவர் பலி,6 பேர் படுகாயம்
கர்நாடகம் மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள குமரேஷ்வர் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர்.தகவலறிந்து அங்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்றனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய பலரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில், கட்டிட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும், இடிபாடுகளில் சிக்கிய 40க்கு மேற்பட்டோரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.தார்வாட் கட்டிட விபத்து பற்றி அறிந்த முதல் மந்திரி குமாரசாமி டுவிட்டரில் கூறுகையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன் என தெரிவித்துள்ளார்
இதனிடையே, உயிரிழந்த 2 பேரின் உடல்களை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்தின் போது கட்டுமானப் பணியாளர்கள் கட்டடத்தில் பணி செய்து கொண்டிருந்ததால், இடிபாடுகளுக்குள் அவர்களும் சிக்கியிருக்கலாம்,எனவே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Also Read
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
“3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - 41 புதிய ITI நிலையங்கள் ” : அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!
-
அமெரிக்க பொருட்களுக்கு 0% வரி; இந்திய பொருட்களுக்கு 18% வரியா? - கனிமொழி MP கேள்வி!