DMK Government
புதுச்சேரி உப்பளம்தொகுதியில் திமுக முன்னிலை- வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறிய அதிமுக வேட்பாளர்!
புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. உப்பளம் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது, தபால் வாக்குகளில் தி.மு.க வேட்பாளர் அனிபால் கென்னடி முன்னிலை பெற்றார்.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்தது. முதல்சுற்று எண்ணப்பட்ட போது, தி.மு.க.வேட்பாளர் அனிபால் கென்னடி 750 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து அ.தி.முக., வேட்பாளர் அன்பழகன் வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறினார்.
முதல் சுற்று முடிவில் தி.மு.க. வேட்பாளர் அனிபால் கென்னடி 4 ஆயிரத்து 19 வாக்குகளும், அ.தி.மு.க வேட்பாளர் அன்பழகன் 2ஆயிரத்து 182 வாக்குகளும் பெற்றார். தி.மு.க வேட்பாளர் அனிபால் கென்னடி 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
Also Read
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
6வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! ஒரே தொடரில் சாதனை மேல் சாதனை! - முழுவிவரம் உள்ளே