DMK Government
புதுச்சேரி உப்பளம்தொகுதியில் திமுக முன்னிலை- வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறிய அதிமுக வேட்பாளர்!
புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. உப்பளம் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது, தபால் வாக்குகளில் தி.மு.க வேட்பாளர் அனிபால் கென்னடி முன்னிலை பெற்றார்.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்தது. முதல்சுற்று எண்ணப்பட்ட போது, தி.மு.க.வேட்பாளர் அனிபால் கென்னடி 750 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து அ.தி.முக., வேட்பாளர் அன்பழகன் வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறினார்.
முதல் சுற்று முடிவில் தி.மு.க. வேட்பாளர் அனிபால் கென்னடி 4 ஆயிரத்து 19 வாக்குகளும், அ.தி.மு.க வேட்பாளர் அன்பழகன் 2ஆயிரத்து 182 வாக்குகளும் பெற்றார். தி.மு.க வேட்பாளர் அனிபால் கென்னடி 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!