DMK Government
“என்னது கொரோனா தடுப்பூசியை மோடி கண்டுபிடிச்சாரா?” - ஊர் பூராம் விஞ்ஞானிகளாகவே இருந்தா எப்படி?
அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரையாற்றுவதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி, இன்று மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அவரை வாழ்த்திப் பேசிய அ.தி.மு.க அமைச்சரும், திருமங்கலம் தொகுதி வேட்பாளருமான உதயகுமார், “இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்த சாதனையாளர், கொரோனா தொற்று உலகத்தையே அச்சுறுத்தியபோது முதன்முதலாக தடுப்பூசி கண்டுபிடித்து இந்தியாவிற்கு கௌரவம் பெற்றுக்கொடுத்தவர் பிரதமர் மோடி” எனப் பேசியுள்ளார்.
“என்னது மோடி கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தாரா? ஐஸ் வைக்கணும்னா வாய்க்கு வந்ததைப் பேசுவாரா” என மேடையில் இருந்தவர்களே ஆச்சரியப் பார்வை பார்த்தனர்.
தோல்வி பயத்தால் சொந்தத் தொகுதிகளிலேயே மூத்த அமைச்சர்களான ஓ.பி.எஸ், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலர் முடங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் மக்களிடம் நடித்து கெஞ்சி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
திருமங்கலத்தில் போட்டியிடும் அமைச்சர் உதயகுமார் ஒருபடி மேலே சென்று, எதிர்ப்படுபவர்கள் எல்லோருடைய காலிலும் விழுந்து வாக்குக்காக கெஞ்சி வருகிறார்.
தோல்வி கண்ணுக்கு எதிரே தெரிவதால், தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்குத் தாவுவதில் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்குள் பெரும் போட்டியே நடக்கும் எனத் தெரிகிறது.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்