DMK Government
எரிபொருட்களை GSTகீழ் கொண்டுவராது ஏமாற்றும் பாஜக: வாக்குச்சீட்டின் வலிமை அசாத்தியமானது -தினகரன் தலையங்கம்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் காஸ் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி வருகின்றன. முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறை பட்ஜெட் போடும் போது விலை உயர்வு, என்பது நடைமுறையில் இருந்தது. ஆனால், இப்போது அந்த கலாச்சாரம் அடியோடு குழி தோண்டி புதைக்கப்பட்டுவிட்டது.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93.11, டீசல் 86.45க்கு விற்கப்பட்டது. சமையல் காஸ் சிலிண்டர் 835க்கு விற்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 610க்கு விற்கப்பட்ட சமையல் காஸ்சிலிண்டர், 4 மாதத்தில் 225 விலை உயர்ந்துள்ளது. மத்திய அரசின் அனைத்து முடிவுகளையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தமிழக அரசு, இந்த விலை உயர்வு பற்றி கண்டு கொள்வதில்லை.
பெயரளவுக்கு கூட எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. அடுத்தடுத்த இந்த விலையேற்றம், மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத மனப்பான்மையால், ஒவ்வொரு வீட்டிலும் பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளது. துயரத்தில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். காய்கறி முதற்கொண்டு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் மனம் போன போக்கில் ஏறுகின்றன. போக்குவரத்து கட்டணம் உயருகிறது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளன. பந்தயக்குதிரை போல் இந்த விலை ஏற்றம், அடித்தட்டு மக்களை நசுக்கிப்போட்டு விட்டது. முரட்டுத்தனமான இந்த விலை உயர்வு, அனைத்து தரப்பு மக்களையும் மிரட்டிக்கொண்டிருக்கிறது. இந்த விலையேற்றத்தின் உச்சம், வாகன ஓட்டிகளை கடும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. எது இந்த விலை உயர்வை எண்ணி, பெண்கள் திகைத்துப்போயுள்ளனர்.
எல்லா பொருட்களின் விலையையும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ்கொண்டு வந்த மத்திய அரசு, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை மட்டும் கொண்டு வராமல், மக்களை சாமர்த்தியமாக ஏமாற்றுகிறது. சமையல் காஸ் விலை ஏற்றம், தாய்மார்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. இந்த விலையேற்றம், தமிழகம், புதுவை உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மத்திய அரசு, சாணக்கியத்தனமாக பெட்ரோல், டீசல் விலையை கடந்த பத்து நாட்களாக ஏற்றம் செய்யாமல், மவுனம் சாதித்து வருகிறது. வாக்குப் பதிவு முடிந்த கையோடு, தனது விளையாட்டை மீண்டும் துவக்கும் என்பது உறுதி. தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள இந்த விலை உயர்வு, மக்களை ஏமாற்றும் செயல் என்பதை அனைவரும் அறிவர். ஜனநாயகத்தில் வாக்குச்சீட்டின் வலிமை அசாத்தியமானது. அந்த அஸ்திரத்தை தமிழகம். உள்பட 5 மாநில மக்கள் கையில் எடுக்க தயாராகி விட்டனர். நிச்சயம் பதிலடி கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!