Election 2024
”இன்று இறுதிப் போராட்டம்” : வாக்காளர்களுக்கு ராகுல் காந்தி வைத்த வேண்டுகோள் என்ன?
18 ஆவது மக்களவை தேர்தல் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த ஏப்.19-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவுடன் தேர்தல் தொடங்கியது. பின்னர் அடுத்த அடுத்த கட்ட தேர்தல்கள் நடைபெற்றது. இன்று 7 ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
உத்தர பிரதேசம் - 13, பஞ்சாப் - 13, பீகார் - 8, மேற்கு வங்கம் - 9, சண்டிகர் - 1, ஹிமாச்சல பிரதேசம் - 4, ஒடிசா - 6, ஜார்க்கண்ட் - 3 உள்ளிட்ட 57 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உங்கள் வாக்குகள் மூலம் இறுதிப் போராட்டத்தை நடத்துங்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகி ராகுல் காந்தி தனது x சமூகவலைத்தளத்தில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
அதில், ”இன்று 7 ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாட்டில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறது.
கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அனைவரும் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்காக வாக்களிக்க வந்ததில் நான் பெருமைப்படுகிறேன்.
ஆணவத்தின், கொடுங்கோன்மையின் அடையாளமாக மாறியுள்ள பா.ஜ.க அரசாங்கத்தின் மீது உங்கள் வாக்கு மூலம் 'இறுதிப் போராட்டம்' நடத்துங்கள். ஜூன் 4 ஆம் தேதி புதிய விடியல் வரப்போகிறது." தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!