Election 2024
எல்லை மீறிய மோடியின் வெறுப்பு பேச்சு: 20,000 பேர் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு - பரபரப்பான தேர்தல் களம்!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக மேற்கொள்ளும் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி மதம் சார்ந்து பேச்சுகள் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்து - முஸ்லீம் பிரிவினைவாத பேச்சுகளும் பேசி வருகின்றனர் பாஜகவினர். இந்த சூழலில் ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து பெரும் அவதூறு பேச்சை பேசியுள்ளார் மோடி.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் பிரசாரம் மேற்கொண்ட மோடி, நமது நாட்டின் செல்வதை எல்லாம் இஸ்லாமியர்கள் எடுத்து செல்வதாகவும், அவர்கள் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள், அவர்களுக்கும் நமது சொத்துகள் அவர்களுக்கு (இஸ்லாமியர்களுக்கு) கொடுக்கப்படுகிறது" என்று இரு சமூக மக்களுக்கு இடையே வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சை பேசியுள்ளார்.
மோடியின் இந்த பேச்சுக்கு நாடு முழுவது கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. அதோடு அவர் மீது தேர்தல் ஆணையத்தில் சி.பி.ஐ (எம்), காங்கிரஸ், சி.பி.ஐ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர். தொடர்ந்து மக்கள் பலரும் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதோடு, மோடிக்கு எதிராக சுமார் 20,000 பேர் தேர்தல் ஆணையத்தில் மோடி மீது புகார் அளித்துள்ளனர்.
மோடியின் வெறுப்பு பேச்சுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்தலில் மோடி போட்டியிட தகுதியற்றவர் என்று அறிவிக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 20 ஆயிரம் புகார் மனுக்கள் மட்டுமின்றி, இ-மெயில் மூலமும் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து புகார்கள் எழுந்து வருகிறது.
மோடியின் தொடர்ந்து பேசி வந்த மத பேச்சுக்கு இது எல்லையின்றி இருக்கிறது. இந்த பேச்சு மூலம் இரு சமூக மக்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்தவே பாஜக முனைப்பு காட்டுகிறது. அதன் எதிரொலியாக தற்போது இந்த பேச்சு அமைந்துள்ளது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!