Election 2024
”வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் குறித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெறாதது ஏன்?” : பாஜகவுக்கு ராகுல் கேள்வி
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் 2024 மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சிகளின் சார்பில் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கையானது மக்கள் பிரச்னைகளை குறிப்பிட்டு எதுவும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் இதனை ஜூம்லா அறிக்கை என்றும் எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருவதோடு, மக்களை மேலும் முட்டாளாக்கும் அறிக்கை என்றும் கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னணி நிர்வாகி ராகுல் காந்தியும் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”நாட்டின் மிக முக்கியமான பிரச்சனைகளான பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகிய 2 வார்த்தைகள் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை. இதிலிருந்தே தெரிகிறது நாட்டின் முக்கிய பிரச்சனைகளை விவாதிக்க பா.ஜ.க விரும்பவில்லை.
ஆனால் இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் 30 லட்சம் நிரந்தர வேலை வாய்ப்புகள் உருவாக்குவோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை மோடியின் பொய் வார்த்தைகளை நம்பி இளைஞர்கள் ஏமாறமாட்டார்கள். இதற்கு மாறாக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து வேலைவாய்ப்பில் புரட்சியை ஏற்படுத்துவார்கள்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!