DMK
‘கலைஞர் மறையவில்லை; கண் முன் தலைவர் வடிவில் மு.க.ஸ்டாலின் நிற்கிறார்’ : நா தழுதழுத்து கலங்கிய துரைமுருகன்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க உள்ளிட்ட முன்னணி கட்சிகள், வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு போன்ற பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் தொலைநோக்குப் பார்வை கொண்ட - தமிழகத்தின் அடுத்த பத்தாண்டுகளுக்கான செயல்திட்டங்கள் குறித்து இலட்சியப் பிரகடனத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் "விடியலுக்கான முழக்கம்" என்ற பொதுக்கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
முன்னதாக பொதுக்கூட்டத்தை வாழ்த்தி பேசிய பொதுச்செயலாளர் துரைமுருகன், “என் வாழ் நாளில் பார்த்திராத பிரம்மாண்ட மக்கள் கூட்டத்தை பார்க்கிறேன். தமிழக மக்களுக்கு நன்மை செய்தது மட்டுமல்லாமல்; தமிழக முதல்வராகி ஜனநாயகத்தை காக்கும் புனிதப்போரை தொடங்குவார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
எந்த மாநிலத்திலாவது ஒரு எதிர்க்கட்சி தலைவர் இவ்வளவு பெருமைப்பட்டது உண்டா? அந்த பெறுமையை தேடி தந்தவர் நம் தலைவர்தான். பெரியார் இல்லாத குறையை, அண்ணா இல்லாத சோகத்தை, தலைவர் கலைஞர் இல்லாத வருத்தத்தை நீக்கி எங்களையெல்லாம் கட்டிக்காக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தையும் வாழ வைக்கவேண்டும்” என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரைக்கு பின்னர் மேடையில் இருந்த பொதுச்செயலாளர் துரைமுருகன், நா தழுதழுத்து கண்கலங்கிய நிலையில், நம்முடைய தலைவர் கலைஞர் மறைந்துவிட்டார் என எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் மறையவில்லை. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வடிவில் இங்கு நம்முடன் தான் இருக்கிறார்.
வயதில் மூத்தவன் என்ற முறையில், அவரை கலைஞர் நிலையில் இருந்து வாழ்த்துகிறேன். எந்நாளும் வாழவேண்டும் என வாழ்த்துக்கிறேன்” என தெரிவித்தார்.
பொதுச்செயலாளர் துரைமுருகனின் இந்த பேச்சு காண்போரை கண்கலங்கச் செய்ததோடு தலைவர் மு.க.ஸ்டாலினை குறித்து பெருமையடையவும் செய்துள்ளது.
Also Read
-
“ஓடி ஒளியும் அவசியம் தி.மு.க.வினருக்கு என்றுமே கிடையாது!” : சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு!
-
வியட்நாமில் கவிழ்ந்த சுற்றுலாப் படகு.. 10 தமிழர்கள் பலி.. மகிழ்ச்சியான இடத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம்!
-
நெல்லையில் நடந்த கொடூரம்.. சுற்றி வளைத்த கும்பல்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த உடல்.. அச்சத்தில் மக்கள்!
-
“இனிமையும் இளமையும் மாறாத குரல்.. கானகோகிலம் எஸ்.ஜானகி மறைவு பேரிழப்பு” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘இசை உலகின் மகுடம் எஸ்.ஜானகி காலமானார்.. 17 மொழிகள்.. 40,000+ பாடல்கள்.. காலத்தால் அழியாத குரல்’