DMK
பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வுக்காக செப்.,9ம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு - தலைமைக்கழகம் அறிவிப்பு!
தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளரை தேர்வு செய்ய, பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற செப்.9ம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 9-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில் காணொலி காட்சி மூலம், தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். ஆகவே, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 3ம் தேதி காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் தனது தலைமையில் நடைபெறும் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வு : தோல்வியை மறைக்க ஒன்றிய அரசு முயற்சி - உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு - மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுவதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“திசை திருப்பும் உக்தியை செய்கிறது தவெக.. ஆதவ் வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும்”: சிவசங்கர் எச்சரிக்கை!
-
மாணவர்களின் கல்வி கனவை பறிப்பதா? - நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பு: RS.பாரதி அறிக்கை!
-
“நீட் மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுக” : பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!