DMK
பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வுக்காக செப்.,9ம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு - தலைமைக்கழகம் அறிவிப்பு!
தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளரை தேர்வு செய்ய, பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற செப்.9ம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 9-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில் காணொலி காட்சி மூலம், தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். ஆகவே, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 3ம் தேதி காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் தனது தலைமையில் நடைபெறும் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!
-
பத்துத் தோல்வி பழனிசாமியின் பழைய ஊழல்கள் – 1 : பட்டியலிட்டு அம்பலப்படுத்திய முரசொலி!
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!