DMK
பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வுக்காக செப்.,9ம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு - தலைமைக்கழகம் அறிவிப்பு!
தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளரை தேர்வு செய்ய, பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற செப்.9ம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 9-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில் காணொலி காட்சி மூலம், தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். ஆகவே, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 3ம் தேதி காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் தனது தலைமையில் நடைபெறும் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!
-
“வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் முப்பெரும் விழா!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
வாக்காளர் பட்டியல் திருத்தம் : “தேர்தல் ஆணையத்தின் மிரட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு பயப்படாது” - முரசொலி!
-
நாளை நடைபெறவுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் ? சென்னையில் எங்கு ? விவரம் உள்ளே !
-
திமுக முப்பெரும் விழா... கரூர் அழைக்கிறது வாரீர் : உடன்பிறப்புகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!