DMK
கொரோனாவில் இருந்து மீண்ட முன்னாள் தி.மு.க அமைச்சர் ரகுமான்கான் காலமானார்!
தி.மு.கவின் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராக இருந்த ரகுமான்கானுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கொரோனா தொற்று இல்லையென முடிவ வந்தால் ரகுமான்கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அதன் பிறகு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ரகுமான்கான் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தார்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் ஆட்சியின் போது வருவாய், சிறுசேமிப்பு உள்ளிட்ட துறைகளில் பொறுப்பு வகித்தவர் ரகுமான்கான். இவர் 1977, 1980, 1984 ஆகிய மூன்று தேர்தல்களிலும் சென்னை சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு அபார வெற்றியை பெற்றவர்.
1989ல் சென்னை பூங்கா நகரிலும், 1996ல் ராமநாதபுரத்திலும் வெற்றி பெற்று 5 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் ரகுமான்கான். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
மேடை பேச்சுகளில் வல்லவரானவர் இவர். இப்படி இருக்கையில் அவரது மறைவு தி.மு.கழகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரகுமான்கானின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.கழக கொடிகளை அரைக்கம்பத்தில் 3 நாட்களுக்கு பறக்க விடுமாறும் தி.மு.க நிகழ்ச்சிகளை ஒத்திவைக்குமாறும் தலைமைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வு : தோல்வியை மறைக்க ஒன்றிய அரசு முயற்சி - உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு - மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுவதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“திசை திருப்பும் உக்தியை செய்கிறது தவெக.. ஆதவ் வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும்”: சிவசங்கர் எச்சரிக்கை!
-
மாணவர்களின் கல்வி கனவை பறிப்பதா? - நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பு: RS.பாரதி அறிக்கை!
-
“நீட் மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுக” : பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!