DMK
“அவர்களால் தான் உலகம் இயங்குகிறது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் அன்னையர் தின வாழ்த்து!
இன்று உலக அன்னையர் தினம் என்பதால் பலரும் தங்களின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலர் தங்களின் அம்மா பற்றி சிறப்புகளைக் கூறி ட்வீட் செய்து அன்னையர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “உயிரின் கரு!
உணர்வின் திரு!
வாழ்வின் உரு!
வளர்ச்சியின் எரு!
- எல்லாம் சேர்ந்தவள் அன்னை!
அவர்களால் தான் உலகம் இயங்குகிறது. இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளர்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும் முடியாது!
என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்!
உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!