DMK
“அவர்களால் தான் உலகம் இயங்குகிறது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் அன்னையர் தின வாழ்த்து!
இன்று உலக அன்னையர் தினம் என்பதால் பலரும் தங்களின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலர் தங்களின் அம்மா பற்றி சிறப்புகளைக் கூறி ட்வீட் செய்து அன்னையர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “உயிரின் கரு!
உணர்வின் திரு!
வாழ்வின் உரு!
வளர்ச்சியின் எரு!
- எல்லாம் சேர்ந்தவள் அன்னை!
அவர்களால் தான் உலகம் இயங்குகிறது. இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளர்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும் முடியாது!
என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்!
உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !