DMK
“சாதி, மதங்களைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் மொழி மட்டுமே” : கனிமொழி எம்.பி., பேச்சு!
வேலூர் மாவட்டத்தில் குடிமல்லூர் தி.மு.கவினர் சார்பில் கலைஞர் அறிவாலயம் அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தி.மு.க எம்.பி., கனிமொழி பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்தார்.
இதனையடுத்து, வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் மாணவிகள் முன்னிலையில் கனிமொழி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “எந்தச் சூழல் ஏற்பட்டாலும் பெண்கள் தன்னம்பிக்கையை விட்டுவிடக் கூடாது. தைரியமும், தன்னம்பிக்கையும் தான் பெண்களுடைய ஆயுதம். ஒரு பெண்ணுக்கு அளிக்கக் கூடிய கல்வி, சமூகத்தையே மாற்றியமைக்கூடிய வல்லமை உடையது.” என நம்பிக்கையூட்டினார்.
மேலும், “சாதி, மதங்களை கடந்து நம் அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் மொழி மட்டுமே. இது மரத்தின் வேரைப் போன்றது. இது பண்பாட்டின் அடையாளம்” என தமிழ் மொழிக்கு புகழாரம் சூட்டினார் கனிமொழி.
Also Read
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?