DMK
“சாதி, மதங்களைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் மொழி மட்டுமே” : கனிமொழி எம்.பி., பேச்சு!
வேலூர் மாவட்டத்தில் குடிமல்லூர் தி.மு.கவினர் சார்பில் கலைஞர் அறிவாலயம் அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தி.மு.க எம்.பி., கனிமொழி பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்தார்.
இதனையடுத்து, வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் மாணவிகள் முன்னிலையில் கனிமொழி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “எந்தச் சூழல் ஏற்பட்டாலும் பெண்கள் தன்னம்பிக்கையை விட்டுவிடக் கூடாது. தைரியமும், தன்னம்பிக்கையும் தான் பெண்களுடைய ஆயுதம். ஒரு பெண்ணுக்கு அளிக்கக் கூடிய கல்வி, சமூகத்தையே மாற்றியமைக்கூடிய வல்லமை உடையது.” என நம்பிக்கையூட்டினார்.
மேலும், “சாதி, மதங்களை கடந்து நம் அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் மொழி மட்டுமே. இது மரத்தின் வேரைப் போன்றது. இது பண்பாட்டின் அடையாளம்” என தமிழ் மொழிக்கு புகழாரம் சூட்டினார் கனிமொழி.
Also Read
-
தமிழ்மொழித் தியாகிகள் தாளமுத்து - நடராசன் திருவுருவச் சிலைகள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“வீட்டுக்கொரு சோலார்“ திட்ட பரப்புரை! : அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்!
-
“அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
44 காவல்துறையினருக்கு குடியரசு தின பதக்கங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
இந்திய கிரிக்கெட் அணி படைத்த இமாலய சாதனை... மிரட்டிய இஷான் கிஷனின் ஆட்டம்! நாலாபுறமும் சிதறிய பந்துகள்!