DMK
“சாதி, மதங்களைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் மொழி மட்டுமே” : கனிமொழி எம்.பி., பேச்சு!
வேலூர் மாவட்டத்தில் குடிமல்லூர் தி.மு.கவினர் சார்பில் கலைஞர் அறிவாலயம் அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தி.மு.க எம்.பி., கனிமொழி பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்தார்.
இதனையடுத்து, வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் மாணவிகள் முன்னிலையில் கனிமொழி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “எந்தச் சூழல் ஏற்பட்டாலும் பெண்கள் தன்னம்பிக்கையை விட்டுவிடக் கூடாது. தைரியமும், தன்னம்பிக்கையும் தான் பெண்களுடைய ஆயுதம். ஒரு பெண்ணுக்கு அளிக்கக் கூடிய கல்வி, சமூகத்தையே மாற்றியமைக்கூடிய வல்லமை உடையது.” என நம்பிக்கையூட்டினார்.
மேலும், “சாதி, மதங்களை கடந்து நம் அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் மொழி மட்டுமே. இது மரத்தின் வேரைப் போன்றது. இது பண்பாட்டின் அடையாளம்” என தமிழ் மொழிக்கு புகழாரம் சூட்டினார் கனிமொழி.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?