DMK
உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் : தி.மு.க முடிவு!
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று மின்சாரம், மதுவிலக்கு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கும், கேள்விகளுக்கும் அமைச்சர்கள் பதிலளிக்கும் கேள்வி நேரம் நிகழும்.
அதற்குப் பிறகு, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
இன்று பிற்பகலில் மின்சாரம், மது விலக்கு உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் இத்துறைகளின் முக்கிய பிரச்னைகள் குறித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் : தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுத்த நடராஜன் !
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!