DMK
குடிநீர் கேட்டு கனிமொழி எம்.பி தலைமையில் சென்னை துறைமுகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைத்தூக்கியுள்ள நிலையில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரோ தண்ணீர் வறட்சி ஏதும் இல்லை, எல்லாம் வதந்திதான் என பேசியிருந்தார். ஆனால் மக்களோ தினந்தோறும் தண்ணீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தண்ணீர் பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்காத எடப்பாடியின் அ.தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில், சென்னை துறைமுகப் பகுதியில் தி.மு.க நாடாளுமன்றக் குழு துணைத்தலைவர் கனிமொழி தலைமையில் தி.மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அ.தி.மு.க அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டது.
குடிநீர் வாரியத்தை முற்றுகையிட்டும் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் கலந்துகொண்டார்.
Also Read
-
தீபாவளி பண்டிகை : தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 20,378 பேருந்துகள் இயக்க முடிவு !
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !
-
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு... பின்னணியில் சனாதனம் - முழு விவரம் உள்ளே !
-
திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! : விவரம் உள்ளே!