DMK
குடிநீர் கேட்டு கனிமொழி எம்.பி தலைமையில் சென்னை துறைமுகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைத்தூக்கியுள்ள நிலையில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரோ தண்ணீர் வறட்சி ஏதும் இல்லை, எல்லாம் வதந்திதான் என பேசியிருந்தார். ஆனால் மக்களோ தினந்தோறும் தண்ணீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தண்ணீர் பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்காத எடப்பாடியின் அ.தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில், சென்னை துறைமுகப் பகுதியில் தி.மு.க நாடாளுமன்றக் குழு துணைத்தலைவர் கனிமொழி தலைமையில் தி.மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அ.தி.மு.க அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டது.
குடிநீர் வாரியத்தை முற்றுகையிட்டும் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் கலந்துகொண்டார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!