DMK
குடிநீர் கேட்டு கனிமொழி எம்.பி தலைமையில் சென்னை துறைமுகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைத்தூக்கியுள்ள நிலையில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரோ தண்ணீர் வறட்சி ஏதும் இல்லை, எல்லாம் வதந்திதான் என பேசியிருந்தார். ஆனால் மக்களோ தினந்தோறும் தண்ணீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தண்ணீர் பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்காத எடப்பாடியின் அ.தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில், சென்னை துறைமுகப் பகுதியில் தி.மு.க நாடாளுமன்றக் குழு துணைத்தலைவர் கனிமொழி தலைமையில் தி.மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அ.தி.மு.க அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டது.
குடிநீர் வாரியத்தை முற்றுகையிட்டும் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் கலந்துகொண்டார்.
Also Read
-
”இது நம்ம ஆட்டம் 2026”- மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய துணை முலமைச்சர் உதயநிதி
-
உலகளவில் முதன்முறையாக.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் கட்டப்பட்டு மேம்பாலம்! - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!
-
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் : இந்திய அளவில் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் முன்னேற்றம்!
-
என்ன சாதித்தார் காப்பி அடிக்க...? : எந்தக் கூச்சமும் இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்தான் பழனிசாமி!
-
46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள்... அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?