DMK
தண்ணீர் தட்டுப்பாடு: தி.மு.கவின் நோட்டிஸ் மீது மக்களவையில் இன்று விவாதம்?
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என கடந்த வெள்ளியன்று தி.மு.க. சார்பில் மக்களவையில் நோட்டிஸ் வழங்கப்பட்டது.
மக்களின் அடிப்படை தேவையாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டில் உள்ளதால் அவசர சூழல் கருதி, விரைவில் இதன் மீதான விவாதம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதனையடுத்து, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், விடுமுறையை அடுத்து இன்று கூடவுள்ள மக்களவையில் இன்று விவாதம் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்போது, மத்திய அரசின் குடிநீர் பிரச்னையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட உள்ளது.
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !