DMK
தண்ணீர் தட்டுப்பாடு: தி.மு.கவின் நோட்டிஸ் மீது மக்களவையில் இன்று விவாதம்?
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என கடந்த வெள்ளியன்று தி.மு.க. சார்பில் மக்களவையில் நோட்டிஸ் வழங்கப்பட்டது.
மக்களின் அடிப்படை தேவையாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டில் உள்ளதால் அவசர சூழல் கருதி, விரைவில் இதன் மீதான விவாதம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதனையடுத்து, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், விடுமுறையை அடுத்து இன்று கூடவுள்ள மக்களவையில் இன்று விவாதம் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்போது, மத்திய அரசின் குடிநீர் பிரச்னையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட உள்ளது.
Also Read
-
அம்மோனியா வாயுக் கசிவு: “எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது” - உதயநிதி வலியுறுத்தல்!
-
“ஏ.. எடு.. எடு..” -சேலம் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் மாமூல்.. அட்ராசிட்டியில் ஈடுபடும் தவெக நிர்வாகி!
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!