DMK
தண்ணீர் தட்டுப்பாடு: தி.மு.கவின் நோட்டிஸ் மீது மக்களவையில் இன்று விவாதம்?
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என கடந்த வெள்ளியன்று தி.மு.க. சார்பில் மக்களவையில் நோட்டிஸ் வழங்கப்பட்டது.
மக்களின் அடிப்படை தேவையாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டில் உள்ளதால் அவசர சூழல் கருதி, விரைவில் இதன் மீதான விவாதம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதனையடுத்து, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், விடுமுறையை அடுத்து இன்று கூடவுள்ள மக்களவையில் இன்று விவாதம் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்போது, மத்திய அரசின் குடிநீர் பிரச்னையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட உள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!