DMK
தண்ணீர் தட்டுப்பாடு: தி.மு.கவின் நோட்டிஸ் மீது மக்களவையில் இன்று விவாதம்?
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என கடந்த வெள்ளியன்று தி.மு.க. சார்பில் மக்களவையில் நோட்டிஸ் வழங்கப்பட்டது.
மக்களின் அடிப்படை தேவையாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டில் உள்ளதால் அவசர சூழல் கருதி, விரைவில் இதன் மீதான விவாதம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதனையடுத்து, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், விடுமுறையை அடுத்து இன்று கூடவுள்ள மக்களவையில் இன்று விவாதம் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்போது, மத்திய அரசின் குடிநீர் பிரச்னையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட உள்ளது.
Also Read
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!
-
தமிழ்நாடு முழுவதும் குறள் வாரவிழா : சிறப்பு காணொலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!