DMK
அண்ணா அறிவாலயத்தில் இன்று கூடுகிறது தி.மு.க. எம்.பிக்கள் கூட்டம்!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 38 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தும் வாழ்த்து பெற்றும் வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இன்று (மே 25) மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்கள் எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்பர். மேலும் தி.மு.க முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இக்கூட்டத்தில் தமிழக பிரச்சனைகள் குறித்து எவ்வாறு விவாதிக்க வேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!