DMK
அண்ணா அறிவாலயத்தில் இன்று கூடுகிறது தி.மு.க. எம்.பிக்கள் கூட்டம்!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 38 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தும் வாழ்த்து பெற்றும் வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இன்று (மே 25) மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்கள் எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்பர். மேலும் தி.மு.க முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இக்கூட்டத்தில் தமிழக பிரச்சனைகள் குறித்து எவ்வாறு விவாதிக்க வேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
தேர்தலுக்கு முன்பாக வெளியான ஆபாச வீடியோக்கள் : சர்ச்சையில் பாஜக கூட்டணி வேட்பாளர் - பரபரப்பான கர்நாடகா !
-
இஸ்லாமியர் குறித்த மோடியின் சர்ச்சை கருத்து - எதிர்ப்பு தெரிவித்த பாஜக முன்னாள் நிர்வாகி கைது !
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!