DMK
தமிழகத்தில் கேடுகெட்ட முதல்வர் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது - உதயநிதி ஸ்டாலின் பரப்புரை !
ஒட்டப்பிடாரம் திமுக வேட்பாளர் சண்முகையா ஆதரித்து முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ,
"தமிழகத்தில் கேடுகெட்ட முதல்வர் தலைமையில் கேடுகெட்ட ஆட்சி நடைபெறுகிறது. தூத்துக்குடியில் நடந்த மக்கள் போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் இப்படிப்பட்ட மனிதாபிமானம் இல்லாத ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. பொதுமக்கள் நடத்தும் போராட்டம் தான் தன் ஆட்சியில் சாதனை என்று கூறுகிறார் முதல்வர். இந்த முதல்வர் நாற்காலி மோடி போட்ட பிச்சை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது இன்னும் மர்மமாக உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று கூறி தர்ம யுத்தம் நடத்திய ஓ.பி.எஸ் தற்போது பதவி கிடைத்ததும் அமைதியாக இருக்கிறார்.
22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் ஜூன் 3 கலைஞர் பிறந்த நாளில் தலைவர் முதல்வராக பதவியேற்பார். திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், விவசாய, கல்வி கடன் ரத்து செய்யப்படும், கேபிள் கட்டணம் குறைவு உள்ளிட்ட அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது." இவ்வாறு கூறினார்
இந்த பிரச்சாரத்தின் போது கே.என்.நேரு, கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மா.சுப்ரமணியம், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Also Read
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
-
அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குழந்தை உரிமைகள் தேசிய ஆணையத்திற்கு சல்மா MP கடிதம்!
-
கரூர் விவகாரம் : ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் - சிபிஐக்கு திமுக புகார் மனு!
-
கரூர் வழக்கு முதல் அடிதடிகள் வரை ; அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க அமைச்சர்கள் : முரசொலி தலையங்கம்!