Cinema
”கலைமாமணி விருது என்னுடையது மட்டுமல்ல நம்முடையது” : இசையமைப்பாளர் அனிருத் நன்றி!
தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு 3 ஆண்டுக்கு 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது திரைப்பட இசையமைப்பாளர் அனிருத்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு இசையமைப்பாளர் அனிருத் நன்றி தெரிவித்துள்ளார். அதில், மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு அறிவிக்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும் பெருமையுடனும் ஏற்றுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இயல் இசை நாடக சங்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.
எனது அனைத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், எனது முழு இசை குழுவினர், அதைவிட முக்கியமாக எப்போதும் அன்பும் ஆதரவுமளித்து வரும் எனது ரசிகர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இறந்தாலும் மற்றவர்களுக்கு உதவும் அந்த மனசு இருக்கே... தானமாக வழங்கப்பட்ட தோழர் நல்லகண்ணுவின் உடல்!
-
ரூ.175 கோடியில் 22 புதிய திட்டப் பணிகள்: எந்த மாவட்டத்தில் என்னென்ன பணிகளை தொடங்கி வைத்தார் CM MK Stalin!
-
3 மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்: ரூ.117.65 கோடியில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திருவான்மியூர் TO உத்தண்டி - 13.30 கி.மீ நீளத்திற்கு ரூ.2100 கோடியில் மேம்பாலம் : அடிக்கல் நாட்டிய CM!
-
“திருச்சியில் திரள்வோம் . . திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்” : அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு!