Cinema
பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் : ஒரே வாரத்தில் 3 பேர் - சோகத்தில் திரையுலகம்!
1980 ஆம் ஆண்டு இவர்கள் ’வித்தியாசமானவர்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக சினிமாவிற்குள் நுழைந்தவர் வேலு பிரபாகரன். ஆனால் இவர் ஒளிப்பதிவாளர் என்ற அறிமுகத்தை விட இயக்குநர் என்ற அடையாளத்தை கொடுத்தது ’நாளைய மனிதன்” படம்.
அதன் பின்னர் ’அதிசய மனிதன்’, ’அசுரன்’, ’ராஜாளி’ போன்ற படிங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென்று இரு அடையாளத்தை உருவாக்கியவர் வேலு பிரபாகரன். இயக்குனராக மட்டுமல்லாது சில படங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த வேலு பிரபாகரன், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது மறைவுக்கு திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிரபல நடிகர் கோட்டா சீனவாச ராவ், பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, இயக்குநர் வேலு பிரபாகரன் என அடுத்தடுத்து 3 திரை ஆளுமைகள் மறைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்த "தமிழ்நாடு கடல்சார் வாரியக் கூட்டம்": முக்கிய முடிவுகள்! - முழு விவரம்!
-
தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அதிகமாக பசுந்தேயிலை... 16 தேயிலை விவசாயிகளுக்கு தலா ரூ.25,000!
-
தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0 : “இதுதான் நமது அடுத்த Target” - முதலமைச்சர் பேசியது என்ன?
-
5 ஆண்டுகளில் தமிழ்நாடு வேளாண்மையில் புரட்சி… திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள்!
-
200 மகளிர் தங்கும் வகையில் ரூ.21.02 கோடியில் 4 தோழி விடுதிகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!