Cinema
“நேரில் பார்த்தால் கன்னத்தில் அறைவேன்” : பாக். நடிகை ஆவேசம் - வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட கங்கனா!
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். பா.ஜ.க ஆதரவாளரான இவர் சர்ச்சையான கருத்துகளைப் பேசி பிரச்னையில் சிக்கிக்கொள்வதையே சமீபகாலமாக வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அந்தவகையில், கடந்த ஆண்டுகளில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய கங்கனா ரனாவத் சுதந்திர போராட்ட வீரர்ளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் “1947ல் கிடைத்தது பிச்சை; 2014ல் கிடைத்ததுதான் உண்மையான சுதந்திரம்” எனப் பேசியுள்ளார். பா.ஜ.கவினரே கங்கனா ரனாவத்தின் இத்தகைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பாஜக ஆதரவு கருத்துத் தெரிவித்தாக கூறி, சிறுபான்மையினருக்கு எதிராக வன்ம கருத்துகளை அவதூறுகளையும் பேசி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அதுமட்டுமல்லாது பாகிஸ்தான் குறித்து தொடர்ந்து பல்வேறு அவதூறு கருத்துகளை கங்கனா ரனாவத் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில், “நடிகை கங்கனா ரனாவத்தை ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிறேன். அவ்வாறு நான் அவரை சந்திக்கும்பட்சத்தில் அவரை இரண்டு முறை அறைவேன்.” என பாகிஸ்தான் பிரபல நடிகை நவுஷீன் ஷா ஆவேசமாக பேசியுள்ளார்.
இதுகுறித்து நடிகை நவுஷீன் ஷா வெளிட்டுள்ள வீடியோ பதிவில், “நடிகை கங்கனா ரனாவத்தை ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிறேன். அவ்வாறு நான் அவரை சந்திக்கும்பட்சத்தில் அவரை இரண்டு முறை அறைவேன்.
அவர் எங்கள் நாட்டைப் பற்றி கேவலமாக பேசி வருகிறார். பாகிஸ்தான் ராணுவம் குறித்து மிகவும் அபத்தமான கருத்துகளை கூறுகிறார். அவருக்கு அறிவே கிடையாது. மற்ற நாட்டைப் பற்றி எதற்காக பேச வேண்டும். உங்கள் நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள்.
உங்கள் திரைப்படங்களைப் பாருங்கள். உங்கள் மீதான சர்ச்சைகள், முன்னாள் காதலன் குறித்து பேசுங்கள்.” என காட்டமாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, மேலும் பலரும் நடிகை கங்கனா ரனாவத்தை கண்டித்து வருகின்றனர்.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!