Cinema
“நேரில் பார்த்தால் கன்னத்தில் அறைவேன்” : பாக். நடிகை ஆவேசம் - வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட கங்கனா!
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். பா.ஜ.க ஆதரவாளரான இவர் சர்ச்சையான கருத்துகளைப் பேசி பிரச்னையில் சிக்கிக்கொள்வதையே சமீபகாலமாக வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அந்தவகையில், கடந்த ஆண்டுகளில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய கங்கனா ரனாவத் சுதந்திர போராட்ட வீரர்ளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் “1947ல் கிடைத்தது பிச்சை; 2014ல் கிடைத்ததுதான் உண்மையான சுதந்திரம்” எனப் பேசியுள்ளார். பா.ஜ.கவினரே கங்கனா ரனாவத்தின் இத்தகைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பாஜக ஆதரவு கருத்துத் தெரிவித்தாக கூறி, சிறுபான்மையினருக்கு எதிராக வன்ம கருத்துகளை அவதூறுகளையும் பேசி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அதுமட்டுமல்லாது பாகிஸ்தான் குறித்து தொடர்ந்து பல்வேறு அவதூறு கருத்துகளை கங்கனா ரனாவத் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில், “நடிகை கங்கனா ரனாவத்தை ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிறேன். அவ்வாறு நான் அவரை சந்திக்கும்பட்சத்தில் அவரை இரண்டு முறை அறைவேன்.” என பாகிஸ்தான் பிரபல நடிகை நவுஷீன் ஷா ஆவேசமாக பேசியுள்ளார்.
இதுகுறித்து நடிகை நவுஷீன் ஷா வெளிட்டுள்ள வீடியோ பதிவில், “நடிகை கங்கனா ரனாவத்தை ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிறேன். அவ்வாறு நான் அவரை சந்திக்கும்பட்சத்தில் அவரை இரண்டு முறை அறைவேன்.
அவர் எங்கள் நாட்டைப் பற்றி கேவலமாக பேசி வருகிறார். பாகிஸ்தான் ராணுவம் குறித்து மிகவும் அபத்தமான கருத்துகளை கூறுகிறார். அவருக்கு அறிவே கிடையாது. மற்ற நாட்டைப் பற்றி எதற்காக பேச வேண்டும். உங்கள் நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள்.
உங்கள் திரைப்படங்களைப் பாருங்கள். உங்கள் மீதான சர்ச்சைகள், முன்னாள் காதலன் குறித்து பேசுங்கள்.” என காட்டமாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, மேலும் பலரும் நடிகை கங்கனா ரனாவத்தை கண்டித்து வருகின்றனர்.
Also Read
-
“இந்த மசோதாவால் நாடாளுமன்ற ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும்” - பாஜக அரசுக்கு திருமாவளவன் கண்டனம்!
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!