Cinema
“கனவு நிஜமானது..” முதல்முறை இணையும் வெங்கட் பிரபு - விஜய் கூட்டணி.. விஜய் 68 படத்தின் மாஸ் Update !
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பாதி பணிகள் முடிந்த நிலையில், கிளைமாக்ஸ் ஷூட்டிங் மட்டும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் விஜயின் 68-வது படத்தை இயக்கப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தது. தொடர்ந்து இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜ இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது.
முதலில் விஜயின் 68-வது படத்தை அட்லீ இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர்களில் யாரேனும் இயக்குவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் விஜயின் 68-வது படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
AGS நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஏற்கனவே 2003-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'புதிய கீதை' படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன்மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய் படத்துக்கு யுவன் இசையமைக்கவுள்ளார். இதனால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். தற்போது விஜய் 68-வது படத்தின் அப்டேட் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “கனவு நிஜமானது..” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் விஜய் 68 படம் குறித்த வீடியோ ஒன்றாயும் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!