Cinema

“நா அப்படி சொல்லவே இல்ல..” : நாக சைதன்யா - சோபிதா Dating விவகாரம் குறித்து சமந்தா கூறியது என்ன ?

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் நடித்துள்ள இவர், அத்தனை மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். சினிமா ஒரு புறம் இருக்க, காதலும் ஒரு புறம் இருந்தது. பல ஆண்டுகளாக இவரும் பிரபல தெலுங்கு திரை நட்சத்திரமான நாக சைதன்யாவும், காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

சுமூகமாக இருந்த இவர்களது உறவு கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இருவரும் அவர்களது தனித்தனி வாழ்க்கையில் சினிமா, சீரிஸ் என்று மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியில் வெளியான 'The Family Man 2' சீரிஸின் மூலம் பாலிவுட்டில் சமந்தா மிகவும் பிரபலமானார் . இவர்களின் விவாகரத்திற்கு இந்த சீரிஸும் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

இவர்கள் விவகாரத்தை தொடர்ந்து தான் மயோசிடிஸ் (Myositis) என்ற ஆட்டோ இம்யூனே பிரச்னை (autoimmune disorder) உள்ளதாக சமந்தா பகிரங்கமாக அறிவித்தார். இவருக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா, ஆகிய படங்கள் வெளியாகி தற்போது அடுத்து குஷி, சாகுந்தலம் படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

அண்மைக்காலமாக அவர் எந்த ஒரு பேட்டி அளித்தாலும், திருமண வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு அழுது விடுவார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதோடு இவர் அவரது Myositis பிரச்னைக்கு சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே நாக சைதன்யாவும் தனது வாழ்க்கையை பார்த்து வருகிறார். அதோடு அவரும் பொன்னியின் செல்வன் பிரபலம் நடிகை சோபிதாவும் டேட்டிங் செய்து வருவதாக இணையத்தில் தகவல்கள் பரவியது.

இந்த நிலையில், சாகுந்தலம் படத்தின் புரோமோஷனுக்காக இவர் பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் பேட்டி அளித்திருந்தார். அப்போது நாக சைதன்யா - சோபிதா குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "யார் யாருடன் உறவில் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு கவலை இல்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும் கண்ணீரில் மூழ்கி விடுவார்கள். குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் தன் சுபாவத்தை மாற்றிக்கொண்டு, அப்பெண்ணை காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால் அனைவருக்கும் நல்லது" என்று பதிலளித்தாக செய்திகள் வெளியாகின.

இது இணையத்திலும் பரவின. இந்த செய்தி தற்போது வைரலாக பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கு நடிகை சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "நான் இப்படி கூறவே இல்லை" என்று அந்த செய்தியை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இது தற்போது திரை வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Also Read: வீட்டு வேலை To சினிமா பாடகி.. திறமைக்கு வயது ஒரு தடையில்லை.. நிரூபித்த Rockstar ரமணியம்மாள் திடீர் மறைவு!