Cinema
படப்பிடிப்பின்போது தற்கொலை செய்துகொண்ட இளம் நடிகை துனிஷா.. பாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலை! -என்ன நடந்தது?
பாலிவுட் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை துனிஷா ஷர்மா. 20 வயதாகும் இவர், நடிகை கத்ரீனா கைப் நடிப்பில் வெளியான Fitoor என்ற படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து சில படங்களிலும் நடித்து வந்த இவர், தனது முழு பணியையும் தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதில் செலவிட்டு வந்தார். இந்தி மொழியில் வெளியாகும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்தி சீரியல் ஒன்றில் நடித்து வரும் இவர், இன்றும் வழக்கம்போல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். அப்போது இடைவெளி விட்டு, தனது அறையில் இருந்துள்ளார். அப்போது நீண்ட நேரமாகியும் இவர் வரவில்லை என்று சீரியல் குழு காத்திருந்த நிலையில், இவரது அறைக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது நடிகை துனிஷா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குழுவினர், இதுகுறித்து உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு உடற்கோராய்வுக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.
விசாரணையில் நடிகை துனிஷா தற்கொலை செய்துகொள்ளும் முன்பு, அவரது நண்பர் ஒருவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், இதற்கு முன்பே துனிஷா தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக கூறினர். தற்போது தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த துனிஷா ஷர்மா (20), பித்தூர், பார் பார் தேகோ, தாதபங்க் உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்துள்ளார். அதோடு அதிகமான இந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
முன்னதாக தமிழில் பிரபலமான 'மூன்று முடிச்சு' சீரியலில் அஞ்சலியாக நடித்த நடிகை வைஷாலி தக்கார் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!