Cinema
“பால் முகம் காணவே நான் தவித்தேன்..” -வெளியானது வாரிசின் #SoulOfVarisu : 1 மணி நேரத்தில் 1M பார்வையாளர்கள்
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் தவிர்க்க முடியாத திரை நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக இருக்கிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பீஸ்ட்' படம் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் ஹிட் கொடுத்தது.
இதையடுத்து தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையில் உருவாகும் இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அந்த போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதாக ஒரு கும்பல் விமர்சித்து வந்தது.
இருப்பினும் நெகட்டிவ் விமர்சனங்களை தள்ளி வைத்து விட்டு, படம் வெளியீட்டுக்கு ரசிகர்கள் பெரிதும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் விஜய் மற்றும் பாடகி மானசி குரலில் வெளியான 'ரஞ்சிதமே..' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து ஒரு வார காலமாக நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்த இப்பாடலை, அஜித்தின் துணிவு படத்தின் 'சில்லா சில்லா' பாடல் ஓவர் டேக் செய்தது. அதன்பின் வெளியான வாரிசின் இரண்டாம் பாடலான சிம்பு பாடிய 'தீ..' பாடல் வெளியிலாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நேற்றைய முன்தினம் துணிவின் இரண்டாம் பாடலான 'காசேதான் கடவுளடா..' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் தற்போது வாரிசின் மூன்றாம் பாடலான 'Soul Of Varisu - அம்மா' பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதி, பாடகி சித்ரா பாடியுள்ள இப்பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
தற்போது துணிவு படத்தின் 'காசேதான் கடவுளோட..' பாடல் நம்பர் 1 ட்ரெண்டிங்கிலும், 'சில்லா சில்லா..' பாடல் ட்ரெண்டிங் 2-லும் இடம்பெற்றுள்ளது. 3-ம் இடத்தில் வாரிசின் 'தீ..' பாடலும், டாப் ட்ரெண்டிங்கில் 5-ம் இடத்தை வாரிசின் 'ரஞ்சிதமே..' பாடலும் இடம்பெற்றுள்ளது. 'ரஞ்சிதமே..' பாடல் சுமார் 101 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
புதுடெல்லியில் நடைபெறும் தமிழ்நாடு நாள்... 44-வது பொருட்காட்சி.. தொடங்கி வைத்தார் அமைச்சர் சாமிநாதன்!
-
சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு நீட்டிப்பு... அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்!
-
இன்றிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு.. ஆரஞ்சு அலர்ட் முதல் கனமழை வரை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
-
சிவகங்கை மாவட்டம் : 8,301 பயனாளிகளுக்கு ரூ.88.37 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்!
-
”பாஜகவும், அடிமைக் கூட்டமும் செய்திடும் SIR சூழ்ச்சியை முறியடிப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!