Cinema
கேரளாவில் சிறந்த நடிகை விருதை பெரும் தமிழ்நாட்டை சேர்ந்த திருநங்கை.. குவியும் பாராட்டு !
கேரளா மாநிலத்தில் ஆண்டுதோறும் திரைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கேரள திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு நடைபெறவிருக்கும் 52-வது கேரள திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த திருநங்கை நேகா என்பவருக்கு விருது வழங்கி கெளரவிக்கவுள்ளது. இந்தாண்டு மலையாள திரையுலகில் வெளியான சென்னையை சேர்ந்த நேகா என்ற திருநங்கை, நட்சத்திரா மனோஜ், கண்ணன் நாயர் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் அபிஜித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் 'அந்தரம்'.
இந்த படத்தில் திருநங்கைகளின் வாழ்க்கை குறித்தும், அவர்கள் கஷ்டத்தை குறித்தும் வேறொரு கண்ணோட்டத்தில் எடுத்துரைக்கிறது. பல்வேறு மொழிகளில் திருநங்கைகளைப் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும், 'அந்தரம்' திரைப்படம் வித்தியாசமாக இருப்பதாக திரை ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது திருநங்கைகளின் குடும்பம் மற்றும் சமூக-அரசியல் பின்னணியில் அதன் லென்ஸைப் பயிற்றுவிக்கும் வகையில் இருக்கும் இந்த படம் தற்போது விருதுகள் பெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது நடைபெறவிருக்கும் 2-வது கேரள திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 'அந்தரம்' திரைப்படத்திற்கான சிறந்த சிறந்த நடிப்பிற்காக திருநங்கையருக்கான சிறப்புப் பிரிவு விருதுக்கு திருநங்கை நேகா தேர்வாகியுள்ளார். இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தனது கடும் உழைப்பினாலும் தேடலினாலும் சாதித்துள்ள நேஹா, பலருக்கு எடுத்துக்காட்டாகவும், ஊக்கமாகவும் திகழ வாழ்த்துகிறேன்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !