Cinema
சுரேஷ் சந்திராவின் உதவியாளரை தாக்கிய பவுன்சர்கள்: "பொன்னியின் செல்வன்" இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு!
மணிரத்தினம் இயக்கத்தில், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், பிரபு, கார்த்தி, த்ரிஷா என பெரிய திரைப்பட்டாளமே நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்'. தமிழ் ரசிகர்கள் வெகு ஆவலுடன் காத்திருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
இதையடுத்து இன்று 'பொன்னியின் செல்வன்' இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
அதேபோல் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா உள்ளிட்ட பலரும் வருகை தந்துள்ளனர். மேலும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஆகியோரும் பங்கேற்றுள்ளார். மேலும் இந்த விழாவைக் காண ரசிகர்களும் குவிந்துள்ளனர். மிகப் பிரம்மாண்டமாக மேடை அமைக்கப்பட்டு இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், "பொன்னியின் செல்வன்" நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுரேஷ் சந்திரா பி.ஆர்.ஓ. வின் உதவியாளரான விக்கி என்பவர் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பவுன்சர்கள் அவரை தாக்கினார்கள். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!