Cinema
சுரேஷ் சந்திராவின் உதவியாளரை தாக்கிய பவுன்சர்கள்: "பொன்னியின் செல்வன்" இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு!
மணிரத்தினம் இயக்கத்தில், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், பிரபு, கார்த்தி, த்ரிஷா என பெரிய திரைப்பட்டாளமே நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்'. தமிழ் ரசிகர்கள் வெகு ஆவலுடன் காத்திருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
இதையடுத்து இன்று 'பொன்னியின் செல்வன்' இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
அதேபோல் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா உள்ளிட்ட பலரும் வருகை தந்துள்ளனர். மேலும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஆகியோரும் பங்கேற்றுள்ளார். மேலும் இந்த விழாவைக் காண ரசிகர்களும் குவிந்துள்ளனர். மிகப் பிரம்மாண்டமாக மேடை அமைக்கப்பட்டு இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், "பொன்னியின் செல்வன்" நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுரேஷ் சந்திரா பி.ஆர்.ஓ. வின் உதவியாளரான விக்கி என்பவர் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பவுன்சர்கள் அவரை தாக்கினார்கள். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! : தி.மு.க சார்பில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல்!
-
“நான் முதல்வனின் அடுத்த version-ல் சர்வதேச அளவிலான சாதனைதான்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
UPSC முடிவுகள் வெளியானது! - ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 56 பேர் தேர்ச்சி பெற்று அசத்தல்!
-
டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா…பும்ரா குறித்து சஞ்சு சாம்சன் சொன்ன அந்த வார்த்தை!
-
“‘பட்டா’ என்ற பல ஆண்டு கனவை நம்முடைய அரசு இன்றைக்கு நனவாக்கி இருக்கிறது!” - துணை முதலமைச்சர் உதயநிதி உரை!