Cinema
சுரேஷ் சந்திராவின் உதவியாளரை தாக்கிய பவுன்சர்கள்: "பொன்னியின் செல்வன்" இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு!
மணிரத்தினம் இயக்கத்தில், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், பிரபு, கார்த்தி, த்ரிஷா என பெரிய திரைப்பட்டாளமே நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்'. தமிழ் ரசிகர்கள் வெகு ஆவலுடன் காத்திருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
இதையடுத்து இன்று 'பொன்னியின் செல்வன்' இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
அதேபோல் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா உள்ளிட்ட பலரும் வருகை தந்துள்ளனர். மேலும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஆகியோரும் பங்கேற்றுள்ளார். மேலும் இந்த விழாவைக் காண ரசிகர்களும் குவிந்துள்ளனர். மிகப் பிரம்மாண்டமாக மேடை அமைக்கப்பட்டு இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், "பொன்னியின் செல்வன்" நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுரேஷ் சந்திரா பி.ஆர்.ஓ. வின் உதவியாளரான விக்கி என்பவர் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பவுன்சர்கள் அவரை தாக்கினார்கள். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"வெல்வோம் 200! படைப்போம் வரலாறு அதுவே என் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி" : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“வி.பி.சிங் போன்ற பிரதமரை கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திராவிட மாடல் 2.0 ஆட்சியை மலரச் செய்வோம் : பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி சூளுரை!
-
“விவசாயிகள் முதுகில் குத்திய பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும்” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சமூக விரோத சட்டங்கள் : தொழிலாளர் வர்க்கத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் ஒன்றிய அரசு - முரசொலி!