Cinema
’நான் அழுதுவிட்டேன் சிவா’.. டான் வெற்றி விழாவில் சிம்பு குறித்துப் பேசிய சிவகார்த்திகேயன்!
லைகா மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்த ‘டான்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, ஆர்.ஜே.விஜய், பால சரவணன், ஷிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையிலான ஜலபுல ஜங்கு பாடலுக்கு பட்டித் தொட்டியெங்கும் ‘டான்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் ‘டான்’ 100 கோடி வசூல் சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு வெளியான டாக்டர் படமும் 100 கோடி வசூலைக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ‘டான்’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் படத்தைப் பார்த்து சிம்பு அழுதுவிட்டதாக போனில் தெரிவித்தாக கூறினார்.
இது குறித்துப் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்," டான் படம் வெற்றிபெற்று வசூல் செய்தது 100 கோடிதான். ஆனா, அது எல்லாம் எனக்கில்ல. படத்தைப் பார்த்து விட்டு ரஜினி சார் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினார்கள். நடிகர் சிம்பு, சிவா படம் சூப்பரா இருக்கு. கடைசி சீனை என்னால் பாக்க முடியல. எனக்கு அப்பான உயிர். நான் அழுதுட்டேதான் படத்தைப் பார்த்தேன் என கூறினார். இந்த நேரத்தில் டான் படத்தைப் பார்த்துப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!