Cinema
“இது விவாகரத்தே இல்லை; எல்லா குடும்பத்துலயும் இருக்குறதுதான்” - தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா விளக்கம்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் இந்திய சினிமாவின் குறிப்பிடத்தகுந்த ஹீரோவாகவும் இருக்கும் நடிகர் தனுஷின் சொந்த வாழ்வு குறித்து அவரே அறிக்கை வெளியிட்டது கடந்த இரண்டு நாட்களாக அனைத்து சமூக வலைதளங்களிலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
18 ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இருவரும் தனித்து வாழ முடிவெடுத்திருப்பதாக தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.
இது கோலிவுட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா இது குறித்து விளக்கமளித்திருக்கிறார்.
இது தொடர்பான பேட்டியில், “தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே வழக்கமாக நடைபெறும் குடும்ப சண்டைதான். கருத்து வேறுபாடு காரணமாக வந்த சண்டைதான். விவாகரத்து இல்லை. இருவரும் ஐதராபாத்தில்தான் தங்கியிருக்கிறார்கள். இருவரிடமும் போனில் பேசி அறிவுரைகளை வழங்கியிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதனிடையே தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்துக்கொண்டு பிரியவில்லை. தனுஷுக்கு கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருவதால் வருடத்துக்கு ஒன்றோ அல்லது இரண்டு முறைதான் மனைவி மற்றும் குழந்தைகளை காணும் சூழல் உள்ளது. எனவே எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு இருவரும் மீண்டும் இணைவார்கள் என்றும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!