Cinema
“இது விவாகரத்தே இல்லை; எல்லா குடும்பத்துலயும் இருக்குறதுதான்” - தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா விளக்கம்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் இந்திய சினிமாவின் குறிப்பிடத்தகுந்த ஹீரோவாகவும் இருக்கும் நடிகர் தனுஷின் சொந்த வாழ்வு குறித்து அவரே அறிக்கை வெளியிட்டது கடந்த இரண்டு நாட்களாக அனைத்து சமூக வலைதளங்களிலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
18 ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இருவரும் தனித்து வாழ முடிவெடுத்திருப்பதாக தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.
இது கோலிவுட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா இது குறித்து விளக்கமளித்திருக்கிறார்.
இது தொடர்பான பேட்டியில், “தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே வழக்கமாக நடைபெறும் குடும்ப சண்டைதான். கருத்து வேறுபாடு காரணமாக வந்த சண்டைதான். விவாகரத்து இல்லை. இருவரும் ஐதராபாத்தில்தான் தங்கியிருக்கிறார்கள். இருவரிடமும் போனில் பேசி அறிவுரைகளை வழங்கியிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதனிடையே தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்துக்கொண்டு பிரியவில்லை. தனுஷுக்கு கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருவதால் வருடத்துக்கு ஒன்றோ அல்லது இரண்டு முறைதான் மனைவி மற்றும் குழந்தைகளை காணும் சூழல் உள்ளது. எனவே எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு இருவரும் மீண்டும் இணைவார்கள் என்றும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரூ.150 கோடி முதலீடு - எல்காட் மற்றும் ஹெச்சிஎல்டெக் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி திட்டம்... கருத்தரங்கம் தொடக்கம் - விவரம்!
-
47 ஆண்டுகளுக்கு பிறகு... “யாரு ஹீரோ...?” - சரியாக 12.07-க்கு வெளியானது KH x RK Glimpse வீடியோ!
-
திருவள்ளுவருக்குக் காவி உடை: முழு சங்கியாக மாறிய எடப்பாடி பழனிசாமி!
-
“இந்த மாதிரி கோமாளி கூட்டத்தோடலாம் நாம சண்டைபோட வேண்டியிருக்கு...” - துணை முதலமைச்சர் கலகல பேச்சு!