Cinema
’ராதே ஷ்யாம்’ அப்டேட் வராததால் அப்செட்; பிரபாஸ் ரசிகரின் தற்கொலை கடிதத்தால் பரபரப்பு!
தெலுங்கு நடிகரான பிரபாஸ் 'பாகுபலி', 'சாஹோ' போன்ற படங்களில் மூலம் இந்திய அளவில் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் 'ராதே ஷ்யாம்' என்ற படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இதில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 'ராதே ஷ்யாம்' படத்தைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'ராதே ஷ்யாம்' படத்தின் அப்டேட் எதுவும் வெளிவராததால் நடிகர் பிரபாஸின் ரசிகர் ஒருவர் படக்குழுவிற்குத் தற்கொலை கடிதம் எழுதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த ரசிகரின் தற்கொலை கடிதத்தில், 'ராதே ஷ்யாம்' படம் குறித்து எந்தவொரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்.
என்னுடைய தற்கொலைக்கு யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும், இயக்குநர் ராதா கிருஷ்ணகுமாரும்தான் காரணம். தற்கொலை கடிதம் எழுதுவேன் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. என்னுடைய மரணத்துக்குப் பிறகாவது ‘ராதே ஷ்யாம்’ படம் குறித்து அப்டேட் கொடுப்பார்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
ரசிகரின் இந்த தற்கொலைக் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே ‘ராதே ஷ்யாம்’ படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Also Read
-
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தேர்தல் ஆணையத்தின் SIR... பாஜக, அதிமுக தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு !
-
"இந்த ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" - தஞ்சாவூர் ஆட்சியர் !
-
"நேரடி நியமனம் : "ஒன்றிய அரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது" - அமைச்சர் KN நேரு விளக்கம் !
-
“பழனிசாமியிடம் துரோகத்தை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளாசல் !