Cinema
சிவகார்த்திகேயனின் டான் படக்குழு மீது வழக்குப் பதிவு: படப்பிடிப்புக்கு நீடிக்கும் சிக்கல் - நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டுப் பட பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், டான் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் படப் பிடிப்பு பணிகள் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. அப்போது கொரோனா விதிமீறலில் ஈடுபட்டதால் படக்குழுவிற்கு 19,400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் டான் படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி உள்ளிட்ட 17 பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் திரைப்பட படப்பிடிப்பில் விதிமீறல் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டான் படத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். உடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி விஜய் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
Also Read
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!