Cinema
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரணுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை... PBS ரசிகர்கள் ஏமாற்றம்!
இயக்குனர் ஷங்கர் கைவசம் தற்போது ‘இந்தியன் 2’, ராம்சரணின் 15வது படம், அந்நியன் ஹிந்தி ரீமேக் உள்ளிட்ட படங்கள் உள்ளன. இதில் ராம்சரணின் 15வது படம் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, மேலும் பிரபல சௌத் கொரியன் நாயகி பே சுசி இதில் ஒப்பந்தமாகியுள்ளார், இவரை தொடர்ந்து ராம் சரண் ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் ஒப்பந்தமானதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின, பின்னர் மாளவிகா மோகனன் அல்லது பிரியா பவானி சங்கர் ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் எனவும் சொல்லப்பட்டது.
இவர்களில் ஒருவர் இந்தப் படத்தில் நிச்சயம் இணைவார்கள் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு பாலிவுட் நாயகி கியாரா அத்வானி இதில் இணைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அடுத்த மாதம் கியாராவின் பிறந்தநாள் அன்று இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் 2022 துவக்கத்திலிருந்து நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!