Cinema
நான்காவது படத்தை இயக்கத் தயாராகும் சி.வி.குமார்... அடுத்தடுத்த படங்களுக்கான கதைகள் ரெடி!
தமிழில் அட்டகத்தி, பிட்ஸா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி எனப் பல படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இப்போதும் பல படங்களுகான தயாரிப்பு வேலைகளில் இருக்கிறார்.
இவர் இயக்குநராக அறிமுகமான படம் 2017ல் வெளியான `மாயவன்'. தொடர்ந்து `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தையும் இயக்கினார். இவர் இயக்கத்தில் உருவான மூன்றாவது 'கொற்றவை' பட ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. இப்போது இவரது இயக்கத்தில் நான்காவதாக உருவாகும் படம் பற்றி அறிவித்திருக்கிறார்.
2017ல் வெளியான சந்தீப், லாவண்யா, ஜாக்கி ஷெரஃப் ஆகியோர் நடித்த `மாயவன்' படத்தின் இரண்டாம் பாகத்தை தான் அடுத்து இயக்க இருக்கிறார். தற்போது அந்தப் படத்துக்கான கதை எழுதும் பணியில் இருக்கிறார்.
சமீபத்தில் தனது ட்விட்டரில் ரசிகர்களில் கேள்விகளுக்கு பதிலளித்தவர் `இன்று நேற்று நாளை 2' படத்தின் ஷூட்டிங் மே, முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
இதுபோக கொற்றவையின் அடுத்த இரண்டு பாகங்களையும் இயக்க இருக்கிறார், தயாரிப்பில் பீட்ஸா படத்தின் மூன்றாவது பாகமும் உருவாக இருக்கிறது.
எழுத்தாளர் தமிழ்மகனின் `நான் ரம்யாவாக இருக்கிறேன்', `ஆபரேஷன் நோவா', `வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்' ஆகிய புத்தகங்களின் திரைப்பட உரிமையையும் வாங்கியிருக்கிறார் சி.வி.குமார். ஒவ்வொரு படத்தின் அறிவிப்பும் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!
-
ரூ.25.72 கோடி செலவில் ‘பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“Computer Expert பழனிசாமியின் கனவு பலிக்காது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
-
#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!