Cinema
நான்காவது படத்தை இயக்கத் தயாராகும் சி.வி.குமார்... அடுத்தடுத்த படங்களுக்கான கதைகள் ரெடி!
தமிழில் அட்டகத்தி, பிட்ஸா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி எனப் பல படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இப்போதும் பல படங்களுகான தயாரிப்பு வேலைகளில் இருக்கிறார்.
இவர் இயக்குநராக அறிமுகமான படம் 2017ல் வெளியான `மாயவன்'. தொடர்ந்து `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தையும் இயக்கினார். இவர் இயக்கத்தில் உருவான மூன்றாவது 'கொற்றவை' பட ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. இப்போது இவரது இயக்கத்தில் நான்காவதாக உருவாகும் படம் பற்றி அறிவித்திருக்கிறார்.
2017ல் வெளியான சந்தீப், லாவண்யா, ஜாக்கி ஷெரஃப் ஆகியோர் நடித்த `மாயவன்' படத்தின் இரண்டாம் பாகத்தை தான் அடுத்து இயக்க இருக்கிறார். தற்போது அந்தப் படத்துக்கான கதை எழுதும் பணியில் இருக்கிறார்.
சமீபத்தில் தனது ட்விட்டரில் ரசிகர்களில் கேள்விகளுக்கு பதிலளித்தவர் `இன்று நேற்று நாளை 2' படத்தின் ஷூட்டிங் மே, முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
இதுபோக கொற்றவையின் அடுத்த இரண்டு பாகங்களையும் இயக்க இருக்கிறார், தயாரிப்பில் பீட்ஸா படத்தின் மூன்றாவது பாகமும் உருவாக இருக்கிறது.
எழுத்தாளர் தமிழ்மகனின் `நான் ரம்யாவாக இருக்கிறேன்', `ஆபரேஷன் நோவா', `வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்' ஆகிய புத்தகங்களின் திரைப்பட உரிமையையும் வாங்கியிருக்கிறார் சி.வி.குமார். ஒவ்வொரு படத்தின் அறிவிப்பும் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!