Cinema
ரீமேக் ஆகிறது 80'ஸ் ப்ளாக்பஸ்டர் திரைப்படம்... பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் சசிகுமார்?
1983ம் ஆண்டு ஏ.வி.எம் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் ‘முந்தானை முடிச்சு’. ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ், தீபா, கே.கே.செளந்தர், பசி சத்யா, தவக்களை சிட்டிபாபு என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
இளையராஜா இசையமைப்பில் உருவான இந்தப் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியிலும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்து 100 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடியது.
தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போது 36 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.வி.எம் சரவணனனிடம் இருந்து முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஜே.எஸ்.பி சதீஷ் கைப்பற்றியுள்ளார்.
இதையடுத்து, படத்தை ரீமேக் செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் தயாரிப்பு நிர்வாகம் இறங்கியுள்ளது. அதன்படி, பாக்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நடிக்க இருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பாக்யராஜையும் படக்குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. விரைவில் இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் குறித்த விவரங்கள் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பாக்யராஜே ‘முந்தானை முடிச்சு’ ரீமேக் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கவும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Also Read
-
NEET 2024 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் : 11 மாணவர்கள் உள்பட 24 பேர் அதிரடி கைது - பின்னணி என்ன?
-
“நான்காம் ஆண்டில் திராவிட மாடல் அரசு - சாதனை முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !