Cinema
ரீமேக் ஆகிறது 80'ஸ் ப்ளாக்பஸ்டர் திரைப்படம்... பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் சசிகுமார்?
1983ம் ஆண்டு ஏ.வி.எம் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் ‘முந்தானை முடிச்சு’. ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ், தீபா, கே.கே.செளந்தர், பசி சத்யா, தவக்களை சிட்டிபாபு என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
இளையராஜா இசையமைப்பில் உருவான இந்தப் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியிலும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்து 100 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடியது.
தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போது 36 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.வி.எம் சரவணனனிடம் இருந்து முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஜே.எஸ்.பி சதீஷ் கைப்பற்றியுள்ளார்.
இதையடுத்து, படத்தை ரீமேக் செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் தயாரிப்பு நிர்வாகம் இறங்கியுள்ளது. அதன்படி, பாக்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நடிக்க இருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பாக்யராஜையும் படக்குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. விரைவில் இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் குறித்த விவரங்கள் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பாக்யராஜே ‘முந்தானை முடிச்சு’ ரீமேக் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கவும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!