Cinema
கொரோனா நிவாரண நிதியாக ரூ. 3 கோடி வழங்கிய ராகவா லாரன்ஸ்... இன்னொரு முக்கிய அறிவிப்பு! #Covid19
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கால் ஏழை எளிய மக்களும், கூலித் தொழிலாளர்களும் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரணமும், தன்னார்வலர்கள் உதவிகளையும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும், நடனக் கலைஞருமான ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 3 கோடி அளித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
மேலும், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சமும், நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சமும் வழங்கியுள்ளார்.
இதற்கிடையே, ரஜினி நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படமான ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. பி.வாசு இயக்கத்தில் உருவாகும் 'சந்திரமுகி 2' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதனை சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் லாரன்ஸ்.
Also Read
-
‘இண்டிகோ’ விமானங்கள் ரத்து செய்வதற்கு காரணம் என்ன? : உண்மையை எடுத்துச் சொல்லும் முரசொலி தலையங்கம்!
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!