Cinema
‘நயன்தாரா திடீர் விரதம்’ - ஏன்? எதற்காக?
ரஜினியின் தர்பார் படத்தில் நடித்து முடித்திருக்கும் நயன்தாரா தற்போது நியூயார்க்கில் தனது பிறந்த நாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். கடந்த நவ.,18ம் தேதி அங்கு பிறந்தநாளை கொண்டாடிய அவர் சென்னை திரும்பியதும் மீண்டும் பட வேலைகளில் இறங்கவுள்ளார்.
ஒன்று, விக்னேஷ் சிவன் தயாரிப்பிலான நெற்றிக்கண், மற்றொன்று ஆர்.ஜே.பாலாஜி நடித்து இயக்கவிருக்கும் மூக்குத்தி அம்மன். இதில் செய்தி என்னவென்றால், மூக்குத்தி அம்மன் படத்தில் நடிப்பதற்காக அந்த படக்குழுவே சைவத்திற்கு மாறியுள்ளதாம்.
இது தொடர்பாக அண்மையில் ஆர்.ஜே.பாலாஜியே பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். அதில், மூக்குத்தி அம்மன் படம் முடியும் வரை படக்குழுவினர் எவரும் அசைவம் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இது சாமி படமாக மட்டுமல்லாமல் சமூக கருத்து சொல்லும் படமாகவும் உருவாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடிக்கவுள்ளதால் அவரும் சைவத்திற்கு மாறியுள்ளார் என கூறிய அவர், கன்னியாகுமரியில் உள்ள கோவில் ஒன்றின் அம்மனுக்கு மூக்குத்தி அம்மன் என்ற பெயர் உள்ளதால் அதனையே படத்துக்கு வைத்துள்ளதாக கூறினார்.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு என்.ஜே.சரவணனும், ஆர்.ஜே.பாலாஜியும் இணைந்து இயக்குகின்றனர். இது 2020 சம்மருக்கு வெளிவரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த மாதம் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
Also Read
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!