Cinema
நவ., 24ல் தொடங்குகிறதா அஜித்தின் ‘வலிமை’ ஷூட்டிங்? - போனி கபூர் வெளியிட்ட தகவல்!
நேர்கொண்ட பார்வைக்கு பிறகு அஜித்தின் அடுத்த படமாக உருவாக இருக்கிறது ‘வலிமை’. எச்.வினோத் இயக்கவிருக்கும் இந்த படத்தையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரே தயாரிக்க உள்ளார்.
படத்தின் பூஜையன்றே டைட்டிலும் அறிவிக்கப்பட்டது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும், படத்தில் அஜித் போலிஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பது, வெகு நாட்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா வலிமை படத்துக்கு இசையமைக்க இருப்பதும் கூடுதல் குஷியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் வருகிற நவம்பர் 24ம் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், படபிடிப்பில் அஜித் எப்போது கலந்துகொள்வார் என்பது குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் போனிகபூர், “வலிமை படத்துக்காக அஜித் தன்னை தயார்படுத்தி வருகிறார். எனவே அவர் தயாரானதும் ஷூட்டிங் பணிகள் தொடங்கப்படும்” என கூறியுள்ளார்.
இது மட்டுமல்லாமல், இதுவரை வந்த படங்களில் சால்ட் & பெப்பர் லுக்கில் வந்த அஜித் வலிமை படத்தில் போலிஸ் கதாபாத்திரத்தில், அதற்கேற்றவாறு ஹீரோயினையும் போலிஸ் கதாபாத்திரத்திலேயெ அமைக்க திட்டமிட்டுள்ளனராம். ஆகையால் ஹீரோயின் தேடும் படலமும் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதற்காக கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர், நயன்தாரா, த்ரிஷா என பல முன்னணி ஹீரோயின்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்த நஸ்ரியாவும் வலிமை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில், நடிகை நஸ்ரியா அஜித்தின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!