Cinema
’இந்த சூழலில் டெல்லியில் வாழ்வது எப்படி ?’ - ட்விட்டரில் கொந்தளித்த பிரியங்கா சோப்ரா
பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா தி ஒயிட் டைகர் என்கிற நெட்ஃபிளிக்ஸ் தொடரில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் டெல்லியில் நடந்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி காற்று மாசுபாடு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப்ரியங்கா சோப்ரா, “ஒயிட் டைகர் ஷூட்டிங் நடக்கிறது. இங்கு ஷூட் செய்யவே ரொம்ப கஷ்டமாக உள்ளது. அப்படி இருக்கும்போது இங்கு வாழ்வது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.
எங்களிடம் காற்றை சுத்தப்படுத்தும் முகமூடி இருக்கிறது. ஆனால், வீடு இல்லாதவர் நிலை எப்படி இருக்கும்?. அவர்களுக்காக பிராத்தனை செய்யவும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் சினிமாவில் பிரபலமானவர் என்பதால் டெல்லி குறித்த அவரது பதிவு வைரலாக பரவி வருகிறது.
Also Read
-
சொந்த கட்சி பெண்ணுக்கு.. 6 மாதமாக நடவடிக்கை எடுக்காத மேலிடம் -தவெக வேட்பாளர் மீது பாய்ந்த பாலியல் வழக்கு!
-
”சூப்பர் ஸ்டாராக தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை.. விழி பிதுங்கி நிற்கும் பழனிசாமி” : முரசொலி தலையங்கம்!
-
TN Election 2026 : திமுக கூட்டணியில் CPIM-க்கு 5 தொகுதிகள்... வேட்பாளர்கள் யார்? - விவரம் உள்ளே!
-
பக்காவாக முடிந்த தேர்தல் அறிக்கை பணி.. அடுத்த டார்கெட்.. பிரச்சாரத்தை தொடங்கும் கனிமொழி எம்.பி…!
-
பா.ஜ.க-வையும் அ.தி.மு.க-வையும் விரட்டியடிப்போம் : காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்!