Cinema
’இந்த சூழலில் டெல்லியில் வாழ்வது எப்படி ?’ - ட்விட்டரில் கொந்தளித்த பிரியங்கா சோப்ரா
பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா தி ஒயிட் டைகர் என்கிற நெட்ஃபிளிக்ஸ் தொடரில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் டெல்லியில் நடந்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி காற்று மாசுபாடு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப்ரியங்கா சோப்ரா, “ஒயிட் டைகர் ஷூட்டிங் நடக்கிறது. இங்கு ஷூட் செய்யவே ரொம்ப கஷ்டமாக உள்ளது. அப்படி இருக்கும்போது இங்கு வாழ்வது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.
எங்களிடம் காற்றை சுத்தப்படுத்தும் முகமூடி இருக்கிறது. ஆனால், வீடு இல்லாதவர் நிலை எப்படி இருக்கும்?. அவர்களுக்காக பிராத்தனை செய்யவும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் சினிமாவில் பிரபலமானவர் என்பதால் டெல்லி குறித்த அவரது பதிவு வைரலாக பரவி வருகிறது.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!