Cinema
’இந்த சூழலில் டெல்லியில் வாழ்வது எப்படி ?’ - ட்விட்டரில் கொந்தளித்த பிரியங்கா சோப்ரா
பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா தி ஒயிட் டைகர் என்கிற நெட்ஃபிளிக்ஸ் தொடரில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் டெல்லியில் நடந்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி காற்று மாசுபாடு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப்ரியங்கா சோப்ரா, “ஒயிட் டைகர் ஷூட்டிங் நடக்கிறது. இங்கு ஷூட் செய்யவே ரொம்ப கஷ்டமாக உள்ளது. அப்படி இருக்கும்போது இங்கு வாழ்வது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.
எங்களிடம் காற்றை சுத்தப்படுத்தும் முகமூடி இருக்கிறது. ஆனால், வீடு இல்லாதவர் நிலை எப்படி இருக்கும்?. அவர்களுக்காக பிராத்தனை செய்யவும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் சினிமாவில் பிரபலமானவர் என்பதால் டெல்லி குறித்த அவரது பதிவு வைரலாக பரவி வருகிறது.
Also Read
-
“தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!