Cinema
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி?
பேட்ட படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதில், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது.
மும்பையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ரஜினி போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். தர்பார் படத்துக்கு பிறகு சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில், தர்பார் பட ஷூட்டிங்கிற்கு இடையில், ரஜினியிடம் ஏ.ஆர். முருகதாஸ் மற்றொரு கதையை சொல்லியிருக்கிறார். இது ரஜினிக்கு பிடித்துப்போக, மீண்டும் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!
-
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!