Cinema
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி?
பேட்ட படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதில், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது.
மும்பையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ரஜினி போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். தர்பார் படத்துக்கு பிறகு சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில், தர்பார் பட ஷூட்டிங்கிற்கு இடையில், ரஜினியிடம் ஏ.ஆர். முருகதாஸ் மற்றொரு கதையை சொல்லியிருக்கிறார். இது ரஜினிக்கு பிடித்துப்போக, மீண்டும் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!