Cinema
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி?
பேட்ட படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதில், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது.
மும்பையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ரஜினி போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். தர்பார் படத்துக்கு பிறகு சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில், தர்பார் பட ஷூட்டிங்கிற்கு இடையில், ரஜினியிடம் ஏ.ஆர். முருகதாஸ் மற்றொரு கதையை சொல்லியிருக்கிறார். இது ரஜினிக்கு பிடித்துப்போக, மீண்டும் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”