Cinema
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி?
பேட்ட படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதில், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது.
மும்பையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ரஜினி போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். தர்பார் படத்துக்கு பிறகு சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில், தர்பார் பட ஷூட்டிங்கிற்கு இடையில், ரஜினியிடம் ஏ.ஆர். முருகதாஸ் மற்றொரு கதையை சொல்லியிருக்கிறார். இது ரஜினிக்கு பிடித்துப்போக, மீண்டும் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
திருமணத்துக்கு மறுப்பு : 3 நாட்கள் வன்கொடுமை செய்து சூடு போட்ட இளைஞர்-பாஜக ஆளும் உ.பி-யில் தொடரும் அவலம்!
-
“பிரஜ்வல் வீடியோவை நான்தான் பாஜக நிர்வாகியிடம் கொடுத்தேன்...” - அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த ஓட்டுநர் !
-
எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தின் எதிரொலி: இறுதியாக வாக்குப்பதிவு விபரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
-
இரக்கமற்ற பிரஜ்வால் ரேவண்ணா : ஓட்டம் பிடிக்க உதவிய பா.ஜ.க!
-
முறைகேடுக்கு வழிவகுக்கும் தேர்தல் ஆணையம்! :எச்சரிக்கும் முன்னாள் தேர்தல் ஆணையர் மற்றும் எதிர்க்கட்சிகள்!