Cinema
’பாலை வனச் சோலைகள்’ உள்ளிட்ட ஹிட் படங்களின் இயக்குநர் மற்றும் நடிகர் ராஜசேகர் காலமானார்!
தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் சென்னையில் இன்று காலை காலமானார்.
இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1980ல் வெளியான நிழல்கள் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஜசேகர். அந்த படத்தில் வைரமுத்துவின் கைவண்ணத்தில் உருவான “இது ஒரு பொன்மாலை பொழுது” பாடல் மூலம் பிரபலமானவர் ராஜசேகர்.
அதன் பிறகு தனது நண்பர் ராபர்ட் உடன் இணைந்து பாலைவனச் சோலை, மனசுக்குள் மத்தாப்பூ, சின்னப்பூவே மெல்லப்பேசு, பறவைகள் பலவிதம், தூரத்துப் பச்சை, கல்யாணக் காலம், தூரம் அதிகமில்லை போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் இரட்டை இயக்குநராக ராஜசேகர் வலம் வந்தார்.
இதனையடுத்து இயக்குநர் வேலைக்கு ஓய்வு கொடுத்த ராஜசேகர் நடிப்பில் கவனம் செலுத்தினார். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பும் வகித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ராஜசேகர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
திடீரென இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் ராஜசேகர் உயிரிழந்தார். இவரது மறைவு செய்தியைக் கேட்டு திரைத்துறையினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!