Cinema

பிரான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘பரியேறும் பெருமாள்’!

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் 'பரியேறும் பெருமாள்' கடந்த வருடம் வெளியானது. இந்தப் படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் திரைக்கு வந்தபிறகும் வெளிநாடுகளில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் கூறியதாவது "பரியேறும் பெருமாள் படம் வெளியாகி பல மாதங்களுக்குப் பிறகு இவ்விழாவில் திரையிடப்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று தெரிவித்தார்.