உலகம்

ஆம்புலன்ஸ், பள்ளி என எதையும் விட்டுவைக்காமல் தாக்கும் இஸ்ரேல் - 9 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு !

ஆம்புலன்ஸ், பள்ளி என எதையும் விட்டுவைக்காமல் தாக்கும் இஸ்ரேல் - 9 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த வாரம் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த வாரம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 9 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆம்புலன்ஸ், பள்ளி என எதையும் விட்டுவைக்காமல் தாக்கும் இஸ்ரேல் - 9 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு !
STRINGER

காசா பகுதியில் உள்ள பள்ளிகள், தங்குமிடங்கள், மருத்துவமனைப் பகுதிகள் போன்றவற்றில் ஹமாஸ் அமைப்பின் சுரங்கபாதைகள் அமைந்திருப்பதாக கூறி அங்கு இஸ்ரேல் ராணுவம், வான்தாக்குதல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், வெள்ளிக்கிழமை ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து, நேற்று இஸ்ரேல் ராணுவம் அல்-ஃபகூரா என்ற பள்ளி மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்த நிலையில், 54 பேர் காயமடைந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் இத்தகையை நடவடிக்கைக்கு உலகளவு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories