உலகம்

உக்ரைன், நேட்டோ நாடுகளிடம் காலியாகும் ஆயுதங்கள்.. அதிகரிக்கும் ரஷ்யாவின் பலம்.. முடிவுக்கு வருமா யுத்தம்?

உக்ரைனிடம் ஆயுதங்கள் இருப்பு குறைந்துள்ளது இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன், நேட்டோ நாடுகளிடம் காலியாகும் ஆயுதங்கள்.. அதிகரிக்கும் ரஷ்யாவின் பலம்.. முடிவுக்கு வருமா யுத்தம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒரு வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றது.

இதுதவிர அமெரிக்கா, உள்ளிட்ட நேட்டோவின் அதிநவீன ஆயுதங்களும் உக்ரைனுக்கு கிடைத்த நிலையில், இதனைத் கொண்டு இனி தற்காப்பு உத்தியை கைவிட்டு ரஷ்யா மீது தாக்குதல் நடத்தப்போவதாக உக்ரைன் அறிவித்த நிலையில், கடந்த வாரம் அந்த தாக்குதல் நடைபெற்றது.இந்த தாக்குதலின்போது அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகள் அதிக பங்குவகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அந்த பீரங்கிகள் எதிர்க்கவே முடியாதது என விளம்பரம் செய்யப்பட்ட நிலையில், இந்த தாக்குதலில் ரஷ்யா தோல்வியைத் தழுவும் என மேற்கத்திய ஊடகங்கள் கூறின.

உக்ரைன், நேட்டோ நாடுகளிடம் காலியாகும் ஆயுதங்கள்.. அதிகரிக்கும் ரஷ்யாவின் பலம்.. முடிவுக்கு வருமா யுத்தம்?

ஆனால், இந்த தாக்குதலில் 8 லெப்பா்ட்-2 பீரங்கிகளை ரஷ்யா தாக்கி அளித்ததாக அதிகார்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் உக்ரைனின் தாக்குதல் தொடங்கிய சில நேரத்திலேயே அது முடிவுக்கு வந்துள்ளது, இதில் ஏராளமான உக்ரைன் வீரர்களும், ஆயுதங்களும் அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும், அதற்காக வீடியோவையும் வெளியிட்டுள்ளது. உக்ரைனின் இந்த தோல்வி மேற்கத்திய நாடுகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதே நேரம் உக்ரைனிடம் எதிர்தாக்குதலுக்கு தேவையான ஆயுதங்கள் இல்லை என்றும், உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை கொடுக்க நேட்டோ உள்ளிட்ட அதன் நட்பு ரீதியிலான நாடுகளாலும் முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக நேட்டோ நாடுகள் இல்லாத இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளிடம் ஆயுதங்கள் வரவழைப்பது குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திவருவதாவும் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனுக்கு போதிய வான்பாதுகாப்பு அமைப்பு இல்லாத நிலையில், அதனிடம் ஆயுதங்கள் இருப்பும் குறைந்துள்ளது இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் ரஷ்யாவுக்கு ஈரான் போன்ற நட்பு நாடுகள் கூடுதல் ஆயுதங்களை தொடர்ந்து அளித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories