உலகம்

Google நிறுவனத்திற்கு ரூ.1,337 கோடி அபராதம் விதித்த இந்திய தொழில் போட்டி ஆணையம்.. காரணம் என்ன?

முறையற்ற வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூகுள் நிறுவனத்திற்கு ரூ.1,337.76 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Google நிறுவனத்திற்கு ரூ.1,337 கோடி அபராதம் விதித்த இந்திய தொழில் போட்டி ஆணையம்.. காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆண்ட்ராய்டு செல்போன்களில் உள்ள கூகுள் ஆப்பை பலர் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான தகவல்களை அதில் தேடி பார்த்துக் கொள்கின்றனர். இந்நிலையில் ஆண்ட்ராய்டு செல்போன்களில் முதன்மை பெறும் நோக்கத்தில் கூகுள் நிறுவனம் முறையற்ற வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து 2019ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக இந்திய தொழில் போட்டி ஆணையம் விசாரணை நடத்தியது.

Google நிறுவனத்திற்கு ரூ.1,337 கோடி அபராதம் விதித்த இந்திய தொழில் போட்டி ஆணையம்.. காரணம் என்ன?

இதில், ஆண்ட்ராய்டு நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் இரண்டு முறைகேடான ஒப்பந்தங்கள் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் விற்பனை சந்தையில் முதன்மை பெறுவதற்காகத் தவறான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

Google நிறுவனத்திற்கு ரூ.1,337 கோடி அபராதம் விதித்த இந்திய தொழில் போட்டி ஆணையம்.. காரணம் என்ன?

இதையடுத்து கூகுள் நிறுவனத்திற்கு ரூ.1,337.76 கோடி அபராதம் விதிக்கப்படுவதாக இந்திய தொழில் போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த முறையற்ற நடவடிக்கையை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூகுள் நிறுவனத்திற்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories